எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் - செக் குடியரசின் தாமஸ் மச்சாக் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தாமஸ் மச்சாக்கை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை எதிர்கொள்ள உள்ளார்.
___________________________________________________________________________________________
அயர்லாந்து அணிக்கு அபராதம்
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று அயர்லாந்தை ஒயிட்வாஷ் ஆக்கியது. இந்த தொடரின் 3-வது போட்டி கடந்த 15-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அயர்லாந்து அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனைக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 10 சதவீதம் அபராதம் விதித்து ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.
___________________________________________________________________________________________
ஒலிம்பிக்கில் செஸ்: குகேஷ்
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனாக வலம் வந்த சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதனையடுத்து, அவருக்கு பிரதமர் முதல் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உலக செஸ் சாம்பியன் குகேஷ், ஒலிம்பிக்கில் செஸ் போட்டி இடம்பெறுவதைப் பார்க்க விரும்புகிறேன்.
அதிலும் குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்தும் பட்சத்தில், அதில் செஸ் இடம்பெறுவதைப் பார்க்க விரும்புகிறேன். செஸ் போட்டிக்கான வரவேற்பு மற்றும் ஆதரவு அதிகரித்துள்ளதாக நினைக்கிறேன். அதை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒலிம்பிக்கில் செஸ் இடம்பெற்றால், அதனை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். ஒலிம்பிக்கில் செஸ் இடம்பெறுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.
___________________________________________________________________________________________
பிப். 14-ல் மகளிர் பிரீமியர் லீக்
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் இந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் முறையாக போட்டிகள் நான்கு நகரங்களில் நடத்தப்படவுள்ளது. போட்டிகள் பரோடா, பெங்களூரு, மும்பை மற்றும் லக்னௌ ஆகிய நான்கு நகரங்களில் நடத்தப்படவுள்ளன. முதல் போட்டி பரோடாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குஜராத் லயன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
பரோடா மற்றும் லக்னௌ இரண்டு நகரங்களிலும் முதல் முறையாக மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. கடந்த ஆண்டு போட்டிகள் அனைத்தும் பெங்களூரு மற்றும் புது தில்லியில் நடைபெற்றன. இந்த ஆண்டு இறுதிப்போட்டி மும்பையில் வருகிற மார்ச் 15 ஆம் தேதி நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
___________________________________________________________________________________________
பயிற்சியில் ரோகித் சர்மா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபடும் விடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த விடியோவில் ரோஹித் சர்மா பல்வேறு விதமான ஷாட்டுகளையும் விளையாடி பயிற்சி மேற்கொள்வதைப் பார்க்க முடிகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா, மும்பை அணியுடன் இணைந்து அண்மையில் பயிற்சி மேற்கொண்டார். இதனால், அவர் ரஞ்சி கோப்பையில் விளையாடவுள்ளார் எனவும் கூறப்பட்டது. இருப்பினும், ஜம்மு காஷ்மீருக்கு எதிராக ஜனவரி 23 ஆம் தேதி மும்பை அணி விளையாடும் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
___________________________________________________________________________________________
இந்திய அணியில்... கருண் விருப்பம்
3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய கருண் நாயர், விஜய் ஹசாரே டிராபியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்து வருகிறார். இதுவரை அவர் 5 சதங்களை விளாசியுள்ளார். விதர்பா அணிக்காக நடப்பு விஜய் ஹசாரே தொடரில் 756 ரன்களை 756 ரன்கள் சராசரியுடன் குவித்துள்ளார். விஜய் ஹசாரே தொடரில் நம்ப முடியாத அளவுக்கு அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கருண் நாயர், இந்திய அணிக்காக விளையாடும் எண்ணம் இன்னும் தனக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: அன்பான கிரிக்கெட்டே, எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எப்போதும் எனக்குள் இருக்கிறது. ஆமாம், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இன்னும் எனக்குள் இருந்துகொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே இந்த தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய ஒரே இலக்கு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-02-2025.
11 Feb 2025 -
'வீட்டுக்கு ஒரு ஓட்டு' விஜய்க்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர்
11 Feb 2025சென்னை: 'வீட்டுக்கு ஒரு ஓட்டு' என்ற அடிப்படையில் விஜய் கட்சிக்கு வாக்குகளை கைப்பற்ற பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
ராமர் நடிக்கும் அது வாங்குனா இது இலவசம்
11 Feb 2025ஸ்ரீஜா சினிமாஸ் தயாரிப்பில் S.K செந்தில் ராஜன் எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அது வாங்குனா இது இலவசம்’.
-
பிப்.14 ல் வெளியாகும் கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்ட்
11 Feb 2025கேப்டன் அமெரிக்கா பிரேவ் நியூ வேர்ல்ட் என்ற ஹாலிவுட் திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது.
-
விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம்
11 Feb 2025செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தில் எஸ்.எஸ்.லலித் குமார் மகன் எல்.கே.
-
ஹவுஸ் மேட்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளீடு
11 Feb 2025கதையின் நாயகனாக தர்ஷன் நடிக்கும் படம் ஹவுஸ் மேட்ஸ், இவர் ஏற்கனவே கனா, தும்பா போன்ற படங்களில் நடித்திருக்கிறார், மேலும், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , த
-
ஜி.டி. நாயுடுவாக நடிக்கும் மாதவன்
11 Feb 2025வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் வழங்கும், கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுத்து இயக்கத்தில் ஜி.டி.நாயுடுவாக மாதவன் நடிக்கிறார்.
-
நீர் மின் உற்பத்தியில் தமிழக மின்வாரியம் புதிய மைல்கல்
11 Feb 2025சென்னை : மத்திய மின்சார ஆணையத்தில் நிர்ணயித்த மின்னுற்பத்தியை விட அதிக அளவு உற்பத்தி செய்துள்ளது.
-
தேர்தல் வியூக மன்னா்களால் பயனில்லை: விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து அமைச்சர் சேகர்பாபு கருத்து
11 Feb 2025சென்னை : தேர்தல் வியூக மன்னா்களால் எவ்வளவு தூரம் பயனிருக்கும் என்பது தெரியவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு
-
அரசு மருத்துவமனை ஊழியர்களுடன் நடிகர் கஞ்சா கருப்பு வாக்குவாதம்
11 Feb 2025சென்னை: போரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற நடிகர் கஞ்சா கருப்பு மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
-
தை பூச திருநாள்: இ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
11 Feb 2025சென்னை : தைப்பூச திருநாளை திருநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
-
தமிழக அரசு மீது வீண் பழி சுமத்தும் அண்ணாமலையின் பகல் கனவு நிறைவேறாது: அமைச்சர் காந்தி
11 Feb 2025சென்னை : அரசின் மீது, வீண் பழி சுமத்தி, களங்கம் ஏற்படுத்த பகல் கனவு காணும் எண்ணம், எந்நாளும் நிறைவேறாது என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப் முதல்வருடன் கெஜ்ரிவால் சந்திப்பு லூதியானா தொகுதியில் போட்டியிட திட்டம்?
11 Feb 2025புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் காலியாக உள்ள லூதியானா சட்டசபை தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் 17-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் ஆய்வு மையம் தகவல்
11 Feb 2025சென்னை: தமிழகத்தில் 17-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
-
கஜா புயல் இழப்பீடு கிடைக்காதவர்கள் விண்ணப்பித்தால் அரசு பரிசீலிக்கும் ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
11 Feb 2025சென்னை: கஜா புயல் இழப்பீடு கிடைக்கவில்லை என்று மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது.
-
கோர்ட்களில் அரசு சார்பில் வாதாட 39 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்
11 Feb 2025சென்னை: சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோட்டு மதுரைக்கிளையில் அரசு சார்பில் வாதாட புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா: பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்
11 Feb 2025தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்
-
போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வேன்: இஸ்ரேல் பணய கைதிகள் விவகாரத்தில் ஹமாசுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
11 Feb 2025வாஷிங்டன்: காசாவில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்றால், போர்நிறுத்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விடுவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய
-
இலங்கை கடற்படையைக் கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்
11 Feb 2025காரைக்கால் : இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளர்.
-
மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் கைது
11 Feb 2025திருப்பூர் : அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
லாட்டரி விற்பனையாளர்கள் சேவை வரி கட்ட தேவையில்லை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
11 Feb 2025புதுடெல்லி: லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் மத்திய அரசுக்கு சேவை வரி செலுத்த வேண்டியதில்லை என கூறி அதற்கான மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து உள்ளது.
-
மதுரையில் தை தெப்பத்திருவிழா கோலாகலம்: தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த மீனாட்சி - சுந்தரேஸ்வரர்
11 Feb 2025மதுரை : மதுரையில் தை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தில் வலம் வந்து அருள்பாலித்த மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.
-
பாலஸ்தீனியர்கள் மீண்டும் காசாவில் குடியேற உரிமையில்லை: அதிபர் டிரம்ப்
11 Feb 2025வாஷிங்டன் : பாலஸ்தீனியர்கள் மீண்டும் காசாவில் குடியேற உரிமையில்லை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
11 Feb 2025மதுரை : தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன
-
யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு
11 Feb 2025புதுடில்லி: யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.