எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பென் டக்கெட் விக்கெட்டை பும்ரா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பும்ரா குறித்து பென் டக்கெட் கூறுகையில், “உலகின் தலைசிறந்த பவுலர் பும்ரா. அவரது பந்து வீச்சை எதிர்கொள்வது அவ்வளவு கடினமாக உள்ளது. எந்த மாதிரியான சூழலிலும் தனது ஆட்டத்திறன் மூலம் அவர் சிறந்து விளங்குகிறார். இந்தியாவின் தட்டையான ஆடுகளம் (பிளாட் பிட்ச்) மற்றும் இங்கிலாந்து என எங்கும் அவரது பந்து வீச்சு தரமாக உள்ளது.
அவர் வீசும் பந்து இரண்டு பக்கமும் இங்கு ஸ்விங் ஆகிறது. இருப்பினும் நாங்கள் சேதாரத்தை குறைத்துள்ளோம். இல்லையென்றால் நிலைமை மோசமாகி இருக்கும். அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். அவரைப் போன்ற ஒருவரை நீங்கள் அப்படியே பந்து வீச செய்து கடந்துவிட முடியாது. அவரை அழுத்தத்தில் வைக்க முயற்சிக்கலாம். மோசமான லைன் மற்றும் லெந்த்தில் வரும் பந்துகளை ஆடலாம்” என டக்கெட் கூறியுள்ளார்.
காம்பீர் மீது குற்றச்சாட்டு
இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் (101 ரன்கள்), கில் (147 ரன்கள்) மற்றும் ரிஷப் பண்ட் (134 ரன்கள்) சதம் விளாசினர். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் ஆட்டமிழக்க இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கொடுத்த தவறான மெசெஜ் தான் காரணம் என்று முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், " மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ரிஷப் பண்டிற்கு வெளியிலிருந்து ஒரு செய்தி அனுப்பப்பட்டபோது, அது அவரது ஆட்டத்தைக் கட்டுப்படுத்தியது. ஒரு பயிற்சியாளராக, நீங்கள் பேட்டருக்கு ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புவது முற்றிலும் புரிந்து கொள்ளத்தக்கது. ஆனால் காலப்போக்கில், சில வீரர்களுக்கு, நீங்கள் அந்த செய்தியை எவ்வாறு அனுப்புகிறீர்கள் என்பது மிக முக்கியமானதாக மாறும். சில வீரர்களுக்கு தவறான செய்தியை வெளியில் இருந்து அனுப்பினால் இப்படித்தான் நடக்கும்" என்று கூறினார்.
ஹாக்கி: இந்திய அணி தோல்வி
9 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ ஹாக்கி லீக் தொடரில் ஐரோப்பிய சுற்று போட்டிகள் பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப்பில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியா- பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த பெல்ஜியம் 6-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த சுற்றில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும். இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் மீண்டும் பெல்ஜியத்தை சந்திக்கிறது.
முன்னதாக பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் பணிந்தது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி மறுபடியும் பெல்ஜியத்துடன் மோதுகிறது.
ரிஷப் பண்ட் புதிய சாதனை
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் நேற்று 3-வது மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக இந்த போட்டியில் ரிஷப் பண்ட் 2 கேட்ச்களை பிடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் 150 கேட்ச்களை பிடித்து ரிஷப் பண்ட் சாதனை படைத்துள்ளார். ஜடேஜா பந்து வீச்சில் ஹாரி ப்ரூக்குக்கு ரிஷப் பண்ட் கேட்ச் மிஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.1,351 கோடிக்கு வாங்கப்பட்ட புளோரியன்
ஜெர்மனி கால்பந்து அணியின் இளம் நட்சத்திர வீரரான புளோரியன் விர்ட்ஸ் கிளப் போட்டிகளில் அங்குள்ள பேயர் லெவர்குசென் அணிக்காக விளையாடி வந்தார். நடுகள வீரரான அவர் அந்த கிளப் அணிக்காக 197 ஆட்டங்களில் ஆடி 57 கோல்கள் அடித்துள்ளார். அவரை இங்கிலாந்து பிரிமீயர் லீக் போட்டியில் அங்கம் வகிக்கும் முன்னணி கிளப்பான லிவர்பூல் தன்வசப்படுத்த முயற்சித்து வந்தது. இரு கிளப் நிர்வாகத்துக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதன்படி பேயர் லெவர்குசென் கிளப்பிடம் இருந்து 22 வயதான புளோரியனை ரூ.1,351 கோடிக்கு லிவர்பூல் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம் இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை புளோரியன் பெற்றார். அத்துடன் ஒட்டுமொத்தத்தில் அதிக தொகைக்கு வசப்படுத்தப்பட்ட 4-வது வீரர் ஆவார். அவர் 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 11 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு
22 Jun 2025மதுரை : மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழப்பு
22 Jun 2025அமராவதி : ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர்.
-
தி.மு.க. கூட்டணியில் அதிக தொகுதிகளில் போட்டியிட ம.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்
22 Jun 2025ஈரோடு : தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. அதிக தொகுதிகள் பெற்று போட்டியிட வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது
22 Jun 2025மதுரை : மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது
-
பயிர் நிவாரண நிதியில் ரூ. 40 கோடி மோசடி: 11 அதிகாரிகள் சஸ்பெண்ட்
22 Jun 2025மும்பை : பருவ மழையின் போது சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணத்தில் ரூ. 40 கோடி மோசடி செய்ததாக 11 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-06-2025.
22 Jun 2025 -
திருச்செந்தூர் முருகன் கோவிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
22 Jun 2025திருச்செந்தூர் : ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று ஏராளமானவர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர்.
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: வாசிம் அக்ரமின் வாழ்நாள் சாதனையை தகர்த்த பும்ரா
22 Jun 2025லீட்ஸ் : டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து ஜஸ்பிரித் பும்ரா 'சேனா' நாடுகளில் (தென் ஆப்பிரிக்கா, இங்கிலா
-
ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்: அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தரிசனம்
22 Jun 2025ராமேசுவரம் : ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக விளங்கி வருகிறது.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்ட இஸ்ரேல் பணய கைதிகளில் மூன்று பேர் சடலமாக மீட்பு
22 Jun 2025காசா முனை : ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்ட பணய கைதிகளில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
த.வெ.க. தலைவர் விஜய்க்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து
22 Jun 2025சென்னை : சகோதரர் விஜய் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அமைதி ஏற்படாவிட்டால் ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் : அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
22 Jun 2025நியூயார்க் : ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
-
அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று ஈரான் அமைச்சர் ஆலோசனை
22 Jun 2025ஈரான் : இஸ்தான்புல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர், இன்று ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளேன் என்று தெரிவித்தார்
-
தமிழ்நாடு ஒருநாளும் இந்தி திணிப்பை ஏற்காது: ஆ.ராசா
22 Jun 2025சென்ன : தமிழ்நாடு ஒருநாளும் இந்தித் திணிப்பை ஏற்காது என்று ரயில்வே அமைச்சருக்கு ஆ.ராசா எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
-
முருகப்பெருமான் தமிழ்நாடு முதல்வர் பக்கம் இருக்கிறார் : அமைச்சர் சேகர்பாபு பேட்டி
22 Jun 2025சென்னை : “எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
-
இ.பி.எஸ். முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த மாற்று கட்சியினர்
22 Jun 2025சேலம் : சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் நேற்று அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
-
ஈரான் மீது திடீர் தாக்குதல்: அமெரிக்காவுக்கு பாக். கண்டனம்
22 Jun 2025லாகூர் : ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி சாதனை: முத்தமிழ்ச்செல்விக்கு துணை முதல்வர் பாராட்டு
22 Jun 2025சென்னை : ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்துள்ள முத்தமிழ்ச்செல்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
ஈரான் தாக்குதல் அச்சம் : நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு
22 Jun 2025அமெரிக்கா : அமெரிக்காவின் முக்கிய நகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் டிசி ஆகியவற்றில் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கை நிலையில் உள்ளன.
-
ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல்: அதிபர் ட்ரம்புக்கு நெதன்யாகு நன்றி
22 Jun 2025டெல் அவிவ் : ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள
-
அமெரிக்காவுக்கு பதிலடி: ஈரான்
22 Jun 2025டெஹ்ரான் : சுய பாதுகாப்பு சார்ந்து சட்டபூர்வமான பதிலடி மூலம் ஈரானின் இறையாண்மை மற்றும் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
-
தடையை நீக்கக்கோரி பெங்களூருவில் 'பைக் டாக்சி' ஓட்டுநர்கள் பேரணி
22 Jun 2025பெங்களுரு : கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ள பைக் டாக்ஸி சேவையை மீண்டும் அனுமதிக்கக் கோரி 8 மாவட்டங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் பெங்களூரு
-
இ.பி.எஸ். கார்டூன் விவகாரம்: புதுச்சேரியில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
22 Jun 2025புதுச்சேரி : எடப்பாடி பழனிச்சாமி கார்டூன் விவகாரத்தில் தி.மு.க.வைக் கண்டித்து புதுச்சேரியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
விஜய் பிறந்தநாள்: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
22 Jun 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நேற்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் தல
-
எங்களுக்கு மக்களை பாதுகாக்கும் உரிமை உள்ளது: ஈரான் அமைச்சர்
22 Jun 2025தெஹ்ரான் : ஈரானின் இறையாண்மை, மக்களை பாதுகாக்கும் உரிமை எங்களிடம் உள்ளது: வெளியுறவு துறை மந்திரி ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக