முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒப்பந்தத்தை நீட்டித்த ரொனால்டோ

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2025      விளையாட்டு
Ronaldo 2023 08 12

Source: provided

உலகின் நட்சத்திர கால்பந்து வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோவின் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார். இதனால் 42 வயது வரை கால்பந்து விளையாடி இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க இருக்கிறார்.

 

இது தொடர்பாக ரொனால்டோ தனது சமூக வலைத்தளத்தில் "புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அதே பேரார்வம், அதே கனவு. இணைந்து சதனைப் படைப்போம்" எனத் தெரிவித்துள்ளார். ஐந்து முறை பலோன் டிஆர் விருது வென்ற ரொனால்டோ, கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் அல்-நாசர் அணிக்கு சென்றார். இவருக்கு வருடத்திற்கு 20 கோடி அமெரிக்க டாலர் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

__________________________________________________________________________________________________

ஜிம்பாப்வே - தெ.ஆப்பிரிக்கா டெஸ்ட் 

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான தென் ஆப்பிரிக்க அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது .இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி புலவாயோவில் இன்று தொடங்க உள்ளது. தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் வழக்கமான கேப்டனான டெம்பா பவுமா காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். 

எனவே இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் புதிய கேப்டனாக கேஷவ் மகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக கிரேக் எர்வின் செயல்பட உள்ளார். இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது . 

__________________________________________________________________________________________________

பேட் கம்மின்ஸ் புதிய சாதனை 

 முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங் தேர்வு செய்து 180 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டாக, அடுத்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாவது இன்னிங்ஸை  ஆஸி. அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். கேப்டனாக கம்மின்ஸ் 139 விக்கெட்டுகளை நிறைவு செய்துள்ளார். இதன்மூலம், கேப்டனாக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் உலக அளவில் 2-ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸி. நாட்டைச் சேர்ந்தவர்களில் கம்மின்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பாக ஆஸி. வீரர் ரிச்சி பெனௌட்  கேப்டனாக 138 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். கேப்டனாக அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்தவர்கள்: இம்ரான் கான் - 187 (பாகிஸ்தான்),  பாட் கம்மின்ஸ் - 139 (ஆஸி.), ரிச்சர்ட் பெனௌட் - 138 (ஆஸி.), கேரி சோபர்ஸ் - 117 (மே.இ.தீ.), டேனியல் வெட்டோரி - 116 (நியூசி.), 

__________________________________________________________________________________________________

மே.இ. வீரருக்கு அபராதம்

முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங் தேர்வு செய்து 180 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டாக, அடுத்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாவது இன்னிங்ஸை  ஆஸி. அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் பாட் கம்மின்ஸ் விக்கட்டை வீழ்த்திய மே.இ.தீ. அணி வீரர் ஜெய்டென் சீல்ஸ் கிளம்பு என்பதுபோல சைகை காண்பிப்பார்.

ஐ.சி.சி. நடத்தை விதிமுறையின்படி ஜெய்டென் சீல்ஸுக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 15 சதவிகிதம் அபராதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஜெய்டென் சீல்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து சீல்ஸ் பேசியதாவது: ன் எதையும் குறிப்பிட்டு அப்படி செய்யவில்லை. அது விரக்தியில் வெளியாகிய ஒரு சைகை. பாட் கம்மின்ஸ் சில நல்ல ஷாட்டுகளை ஆடினார். நான் ஓய்வறை அங்கிருக்கிறது என்பதைத்தான் காட்டினேன் எனக் கூறினார். கடந்த 2 ஆண்டுகளில் இது 2-ஆவது முறை என்பதால் அவருக்கு 2 தகுதி இழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

__________________________________________________________________________________________________

அரையிறுதியில் யூகி பாம்ப்ரி  

ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது. இதில் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, பிரேசிலின் ரபேல் மடோஸ், மார்செலோ மெலோ ஜோடியை ஜோடியை சந்தித்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய யூகி பாம்ப்ரி 6-2, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

__________________________________________________________________________________________________

மான்செஸ்டர் அபார வெற்றி

கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில், நேற்று 'ஜி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி(இங்கிலாந்து ) - யுவென்டஸ் (இத்தாலி ) அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மான்செஸ்டர் சிட்டி அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து