எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
உலகின் நட்சத்திர கால்பந்து வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோவின் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார். இதனால் 42 வயது வரை கால்பந்து விளையாடி இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க இருக்கிறார்.
இது தொடர்பாக ரொனால்டோ தனது சமூக வலைத்தளத்தில் "புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அதே பேரார்வம், அதே கனவு. இணைந்து சதனைப் படைப்போம்" எனத் தெரிவித்துள்ளார். ஐந்து முறை பலோன் டிஆர் விருது வென்ற ரொனால்டோ, கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் அல்-நாசர் அணிக்கு சென்றார். இவருக்கு வருடத்திற்கு 20 கோடி அமெரிக்க டாலர் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
__________________________________________________________________________________________________
ஜிம்பாப்வே - தெ.ஆப்பிரிக்கா டெஸ்ட்
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான தென் ஆப்பிரிக்க அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது .இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி புலவாயோவில் இன்று தொடங்க உள்ளது. தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் வழக்கமான கேப்டனான டெம்பா பவுமா காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.
எனவே இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் புதிய கேப்டனாக கேஷவ் மகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக கிரேக் எர்வின் செயல்பட உள்ளார். இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது .
__________________________________________________________________________________________________
பேட் கம்மின்ஸ் புதிய சாதனை
முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங் தேர்வு செய்து 180 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டாக, அடுத்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாவது இன்னிங்ஸை ஆஸி. அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். கேப்டனாக கம்மின்ஸ் 139 விக்கெட்டுகளை நிறைவு செய்துள்ளார். இதன்மூலம், கேப்டனாக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் உலக அளவில் 2-ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
ஆஸி. நாட்டைச் சேர்ந்தவர்களில் கம்மின்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பாக ஆஸி. வீரர் ரிச்சி பெனௌட் கேப்டனாக 138 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். கேப்டனாக அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்தவர்கள்: இம்ரான் கான் - 187 (பாகிஸ்தான்), பாட் கம்மின்ஸ் - 139 (ஆஸி.), ரிச்சர்ட் பெனௌட் - 138 (ஆஸி.), கேரி சோபர்ஸ் - 117 (மே.இ.தீ.), டேனியல் வெட்டோரி - 116 (நியூசி.),
__________________________________________________________________________________________________
மே.இ. வீரருக்கு அபராதம்
முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங் தேர்வு செய்து 180 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டாக, அடுத்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாவது இன்னிங்ஸை ஆஸி. அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் பாட் கம்மின்ஸ் விக்கட்டை வீழ்த்திய மே.இ.தீ. அணி வீரர் ஜெய்டென் சீல்ஸ் கிளம்பு என்பதுபோல சைகை காண்பிப்பார்.
ஐ.சி.சி. நடத்தை விதிமுறையின்படி ஜெய்டென் சீல்ஸுக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 15 சதவிகிதம் அபராதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஜெய்டென் சீல்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து சீல்ஸ் பேசியதாவது: ன் எதையும் குறிப்பிட்டு அப்படி செய்யவில்லை. அது விரக்தியில் வெளியாகிய ஒரு சைகை. பாட் கம்மின்ஸ் சில நல்ல ஷாட்டுகளை ஆடினார். நான் ஓய்வறை அங்கிருக்கிறது என்பதைத்தான் காட்டினேன் எனக் கூறினார். கடந்த 2 ஆண்டுகளில் இது 2-ஆவது முறை என்பதால் அவருக்கு 2 தகுதி இழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
__________________________________________________________________________________________________
அரையிறுதியில் யூகி பாம்ப்ரி
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது. இதில் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, பிரேசிலின் ரபேல் மடோஸ், மார்செலோ மெலோ ஜோடியை ஜோடியை சந்தித்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய யூகி பாம்ப்ரி 6-2, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
__________________________________________________________________________________________________
மான்செஸ்டர் அபார வெற்றி
கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில், நேற்று 'ஜி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி(இங்கிலாந்து ) - யுவென்டஸ் (இத்தாலி ) அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மான்செஸ்டர் சிட்டி அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 10 hours ago |
-
இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்., உடன் கூட்டணியா? - இல்லை என்கிறது வங்கதேசம்
27 Jun 2025டாக்கா : இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்கீஸ்தான் உடன் கூட்டணி இல்லை என்று வங்கதேசம் அரசு தெரிவித்துள்ளது.
-
2027-ம் ஆண்டுக்குள் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்படும்: ரஷ்யா உறுதி
27 Jun 2025புதுடில்லி : வரும் 2027ம் ஆண்டிற்குள், மீதமுள்ள இரண்டு எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-06-2025.
27 Jun 2025 -
அணுசக்தி ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
27 Jun 2025டெஹ்ரான் : அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அடுத்த வாரம் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக தெரிவித
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்
27 Jun 2025சென்னை : சிறுவன் கடத்தல் வழக்கில், பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
எழுத்தாளரை போற்றும் சமூகமே உயர்ந்த சமூகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Jun 2025சென்னை, தமிழ்ச் சமூகத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியைப் போன்ற படைப்பாளிகள் உருவாக வேண்டும் என்று சாகித்ய அகாடமி மற்றும் ஜே.என்.யு. பல்கலை.
-
படிக்கட்டுகளில் சாகசம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
27 Jun 2025மதுரை : பேருந்துகளில் சாகசத்துக்காக படிக்கட்டில் நின்றும், தொங்கியபடியும் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் ந
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 44 ஆயிரம் கனஅடியாக உயர்வு
27 Jun 2025சேலம் : கர்நாடகா அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணைக்கு 44 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
-
வரும் 15-ம் தேதி முதல் காலை உணவு திட்டம் அரசு உதவிபெறும் அனைத்து பள்ளிகளிலும் அமலாகிறது
27 Jun 2025சென்னை, அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஜூலை 15ம் தேதி முதல் தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
-
4 நாட்களுக்கு பிறகு குற்றால அருவியில் குளிக்க அனுமதி
27 Jun 2025தென்காசி : குற்றாலம் அருவியில் 4 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளித்துள்ளனர்.
-
அகமதாபாத் விமான விபத்து; ஐ.நா., விசாரணையை நிராகரித்தது இந்தியா
27 Jun 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவ ஐ.நா., விமான போக்குவரத்து ஆணையம் முன்வந்தது.
-
தமிழ்நாட்டில் 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
27 Jun 2025சென்னை, பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகள் 2019க்குப் பிறகு ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ள நிலையில் தமிழ்நாட்டி
-
தேசிய நிதி உதவி முடிவுகளில் முரண்பாடு: மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்
27 Jun 2025சென்னை : தேசிய பட்டியல் சாதியினருக்கான பெல்லோஷிப் முடிவுகளில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
போதைப்பொருள் வழக்கு: கொகைன் விற்றவர் மேலும் ஒரு வழக்கில் கைது
27 Jun 2025சென்னை : சென்னை மாநகருக்கு பெங்களூரில் இருந்து அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவது போலீசார் நடத்தி வரும் தொடர்ச்சியான விசாரணையில் தெரியவந்துள்ளது
-
குறைந்த தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் தான் இருப்போம் : திருமாவளவன் திட்டவட்டம்
27 Jun 2025திருச்சி : குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் இருப்போம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
4.8 ரிக்டர் அளவில் சீனாவில் நிலநடுக்கம்
27 Jun 2025பீஜிங் : சீனாவில் ரிக்டர் 4.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத 345 கட்சிகளை நீக்கும் நடவடிக்கை தொடக்கம்
27 Jun 2025புதுடெல்லி : இந்திய தேர்தல் ஆணையம் 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
-
தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? - செல்வப்பெருந்தகை விளக்கம்
27 Jun 2025திண்டிவனம் : பா.ம.க. தி.மு.க. கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பது குறித்து செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.
-
கர்நாடகாவில் 15 வகையான மருந்து, மாத்திரைகளுக்கு தடை
27 Jun 2025பெங்களூரு : கர்நாடகத்தில் 'பாராசிட்டமல்-650' உள்பட 15 வகையான மருந்து மாத்திரைகளுக்கு கர்நாடக அரசின் சுகாதாரத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவு சேதம் : நிதியமைச்சர் பெசாலல் ஸ்மோட்ரிச் தகவல்
27 Jun 2025இஸ்ரேல் : ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
-
போதைப் பொருள் வழக்கில் ஜாமின் கோரி நடிகர் கிருஷ்ணா மனு தாக்கல்
27 Jun 2025சென்னை : நடிகர் கிருஷ்ணா ஜாமின் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பா.ஜ.க. கூட்டணியில் விஜய் இணைவாரா? - காத்திருங்கள் என அமித்ஷா பதில்
27 Jun 2025புதுடெல்லி : தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க. இணையுமா என்ற கேள்விக்கு காத்திருங்கள் என அமித்ஷா பதிலளித்தார்.
-
சீனாவுடனான பதற்றத்தை குறைக்க 4 திட்டங்களை எடுத்துரைத்த ராஜ்நாத்
27 Jun 2025பீஜிங் : சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் டாங் ஜூனை சந்தித்த நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லையில் பதற்றத்தை குறைப்பது மற்றும் இரு நாடுகளுக்கு இடைய
-
திருவள்ளூர் அருகே போலீஸ்காரரை காரில் இழுத்து சென்ற ரவுடியை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
27 Jun 2025திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ்காரரை காரில் இழுத்து சென்ற ரவுடியை 2 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
-
கமேனியை கொல்ல திட்டம்: ஒப்புக்கொண்டது இஸ்ரேல்
27 Jun 2025டெல் அவிவ் : கமேனியே கொல்ல திட்டமிடப்பட்டதை இஸ்ரேல் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது.