எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
காசா : காசாவில் உணவின்றி இதுவரை 21 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலியானதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தீவிர ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தின் காசாவில் உணவு பற்றாக்குறை மற்றும் மனித அத்துமீறல்கள் அரங்கேறுவது தொடர்கிறது.
இந்த சூழலில்தான் காசாவில் பட்டினி காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நஸர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. உதவி மையங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து காசாவில் களப்பணியில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர். காசாவுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில் பிரத்யேக சிறப்பு வழித்தடத்தை ஏற்படுத்தும் வகையில் கத்தாரில் ‘இஸ்ரேல் - ஹமாஸ்’ இடையே பேச்சுவார்த்தை நடத்தவும் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. காசாவில் சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மோதல் காரணமாக அங்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதே நேரத்தில் உதவி முகாம்களை மக்கள் அணுக முயற்சிக்கும் போது அவர்கள் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்படுகின்றனர். மொத்தத்தில் காசா பகுதி பூலோக நரகமாக மனிதர்களுக்கு மாறியுள்ளது.
இந்நிலையில், காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபாவின் இயக்குனர் முகமது அபு சால்மியா, “காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 72 மணி நேரத்தில் 21 குழந்தைகள் இறந்துள்ளனர்” என தெரிவித்தார். காசாவில் உள்ள உலக சுகாதார மையத்தின் அமைப்புகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இதில் சுமார் 15 பேர் உயிரிழந்ததாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் உறுதி செய்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-07-2025.
23 Jul 2025 -
சவரன் ரூ.75,000-ஐ தாண்டி தங்கம் விலை புதிய உச்சம் : கடந்த 5 நாட்களில் ரூ.2,160 உயர்வு
23 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று (புதன்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.75,000-ஐ தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
-
மதுரையில் த.வெ.க. மாநாடு: பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
23 Jul 2025மதுரை : மதுரையில் த.வெ.க. மாநாட்டிற்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
90 அணைகளில் 185 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது : தமிழக நீர்வளத்துறை தகவல்
23 Jul 2025சென்னை : தமிழகத்தில் 90 அணைகளில் 185 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பு உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் காலாவதியான 278 கிலோ பேரீச்சம் பழம் பறிமுதல்
23 Jul 2025கோவை : ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குகளில் காலாவதியான 278 கிலோ பேரீச்சை பழம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதிகள் 4 பேர் கைது
23 Jul 2025அகமதாபாத் : அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
-
போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா அதிபர் புதினுடன் பேச தயார்: ஜெலன்ஸ்கி
23 Jul 2025கீவ் : போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேச தயாராக இருக்கிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
28 கோடி இந்தியர்கள் கடனாளிகள் : பார்லி.யில் மத்திய அரசு தகவல்
23 Jul 2025புதுடெல்லி : இந்தியாவில் சுமார் 28 கோடி தனிப்பட்ட கடனாளிகள் உள்ளனர் என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை
23 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை
-
ஜூன் மாதத்திற்கு பிறகு குறைந்தது கொரோனா தொற்று: மத்திய அரசு
23 Jul 2025புதுடெல்லி : ஜூன் மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்று குறைந்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
அயர்லாந்தில் ஆடைகளை களைந்து இந்தியர் மீது இனவெறி தாக்குதல்
23 Jul 2025டப்ளின் : அயர்லாந்தில் ஆடைகளை களைத்து இந்தியர் மீது இனவெறி தாக்குதல் நடைபெற்றது.
-
தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி : ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்ய உத்தரவு
23 Jul 2025சென்னை : புதிய படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் திருப்பித்தராத விவகாரத்தில், நடிகர் ரவி மோகன், 5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்
-
மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ்? : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
23 Jul 2025சென்னை : மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
வங்காளதேச விமான விபத்து: உயிரிழப்பு 31 ஆக அதிகரிப்பு
23 Jul 2025டாக்கா : வங்காளதேச விமான விபத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் இந்திய நகரங்கள் : உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை
23 Jul 2025ஜெனீவா : இந்திய நகரங்கள் வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற காலநிலை ஆபத்துகளால் அதிக பாதிக்கப்படும் சூழலில் உள்ளன என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 2-வது நாளாக போராட்டம்
23 Jul 2025புதுடெல்லி : பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
-
தமிழகம் திராவிட மாடல் 2.0-ல் முதல் மாநிலமாக உயரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Jul 2025சென்னை : திமுக ஆட்சியில் இரு மடங்கு வளர்ச்சி என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்து வர உள்ள திராவிட மாடல் 2.0-ல் முதல் மாநிலமாக உயருவோம் என்றும்
-
அமெரிக்கா-ஜப்பான் இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
23 Jul 2025நியூயார்க் : ஜப்பானுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு : அவசர அவசரமாக தரையிறக்கம்
23 Jul 2025திருவனந்தபுரம் : கத்தார் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்க கோளாறு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கப்பட்டது.
-
ராசேந்திர சோழனின் பிறந்த நாள்: கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
23 Jul 2025சென்னை : ராசேந்திர சோழனின் பிறந்த நாளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ பேரரசின் வ
-
மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்
23 Jul 2025ரோம் : இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார்.
-
நடமாடும் வீடுகளுக்கு தடை
23 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் நடமாடும் வீடுகளுக்கு உள்ளூர் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
தொடரை வென்றது இந்தியா
23 Jul 2025இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.
-
எனக்கு பாதுகாப்பில்லை: நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர்
23 Jul 2025டெல்லி : என் வீட்டுக்குள்ளேயே எனக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிக்கை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் வீடியோ சமுகவரையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
லண்டன் சால்போர்ட் நகரில் பஸ்சின் மேற்பகுதி பாலத்தில் உரசியதில் 20 பேர் படுகாயம்
23 Jul 2025லண்டன் : லண்டன் சால்போர்ட் நகரி் பஸ்சின் மேற்பகுதி பாலத்தில் மோதியதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.