எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஆண்டின் கடைசி ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் சினெரை தோற்கடித்து 2-வது முறையாக மகுடம் சூடினார். சாம்பியன் பட்டம் வென்ற அல்காரசுக்கு ரூ.44 கோடியும், 2-வது இடம் பிடித்த சினெருக்கு ரூ.22 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
அதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா அனிசிமோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார். மகுடம் சூடிய அரினா சபலென்கா ரூ.44 கோடியை பரிசாக அள்ளினார். 2-வது இடம் பிடித்த அனிசிமோவாவுக்கு ரூ.22 கோடி பரிசாக கிட்டியது.
_____________________________________________________________________________________
கம்மின்ஸ், ஸ்டார்க் புதிய திட்டம்
ஆஸ்திரெலிய அணியின் தூண்களாக ஸ்டார்க் (35), கம்மின்ஸ் (32), ஹேசில்வுட் (34) இருக்கிறார்கள். மூவருமே முப்பதைக் கடந்ததால் இன்னும் எத்தனை வருஷன் விளையாடுவார்கள் எனத் தெரியவில்லை. சமீபத்தில் ஸ்டார்க் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஹேசில்வுட் காயத்தால் அவதியுறுகிறார். பாட் கம்மின்ஸ் நியூசி., இந்தியாவுடனான வெள்ளைப் பந்து தொடரை காயம் காரணமாக புறக்கணித்துள்ளார்.
இந்நிலையில், ஹேசில்வுட் சென் ரேடியாவில் இது குறித்து பேசியதாவது: தற்போதைய நிலைமைக்கு எங்களால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால், தொடருக்கு பின்பு உட்கார்ந்து இது குறித்து சிந்திப்போம். நாங்கள் அனைவருமே டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கிறோம். அடுத்த இரண்டாண்டுகளில் அதிகமான போட்டிகள் வரவிருக்கின்றன. ஆஷஸ் தொடர் மட்டுமல்லாமல் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டிகளும் இருப்பதால் எங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் ஆர்வமாக இருக்கிறது. எங்களிடம் இன்னும் சில ஆண்டுகளுக்கான கிரிக்கெட் மிச்சம் இருக்கிறதென நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.
_____________________________________________________________________________________
தெ.ஆப்பிரிக்கா அணிக்கு அபராதம்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதலிரண்டு போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்க 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 342 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக ஐ.சி.சி. அபராதம் விதித்துள்ளது. அதன்படி இந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்த அனைவருக்கும் தலா 5 சதவீதம் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
_____________________________________________________________________________________
சஞ்சு சாம்சனின் தாராள மனசு
கேரளாவில் கேரள பிரீமியர் லீக் டி20 2025 தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரில் கொச்சி அணிக்காக 26.80 லட்சம் என்ற பெரிய தொகைக்கு சஞ்சு சாம்சன் வாங்கப்பட்டார். அந்த அணிக்காக ஓப்பனிங்கில் களமிறங்கி மிரட்டலாக விளையாடிய அவர் 5 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 368 ரன்கள் குவித்து அசத்தினார். இருப்பினும் ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்ட அவர் பிளே ஆப் சுற்றுக்கு முன்பாக கொச்சி அணியிலிருந்து வெளியேறினார். மறுபுறம் சஞ்சு சாம்சன் தம்பி ஷாலி சாம்சன் தலைமையில் தொடர்ந்து அசத்திய கொச்சி அணி 2025 கேரளா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்நிலையில் கோப்பையை வென்ற தங்களுடைய கொச்சி அணிக்கு சாம்சன் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்ற தம்முடைய தம்பிக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் ஏலத்தில் தமக்கு கொடுக்கப்பட்ட சம்பளத் தொகையை கொச்சி அணியின் சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு பரிசாக வழங்குவதாகவும் சாம்சன் அறிவித்துள்ளார். எனவே தம்முடைய மாநிலத்தில் நடைபெறும் தொடரின் சம்பளத்தை அவர் சக வீரர்களுக்கு சிறிய ஊக்கத்தொகைப் பரிசாக வழங்கியுள்ளார். அவருடைய இந்த செயலுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு வருகின்றனர்.
_____________________________________________________________________________________
இந்திய அணி குறித்து பாக்., கேப்டன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று இரவு தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி ஆசியக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படுகிறதே என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
இதற்கு பதிலளித்த சல்மான் ஆகா, டி20 கிரிக்கெட்டில் எந்த அணியையும் ஃபேவரிட் என நான் நினைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட நாளில் நீங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாட வேண்டும். இது ஒரு வேகமான விளையாட்டு. ஓரிரு மணி நேரம் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.81 ஆயிரத்தை கடந்தது
09 Sep 2025சென்னை, தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.440 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டிருந்த நிலையில், நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சம் தொட்ட
-
அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டு கொலை
09 Sep 2025அமெரிக்கா, அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
-
வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
09 Sep 2025சென்னை : வெளிநாட்டு பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி
-
புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு: த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
09 Sep 2025சென்னை : புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மனிதன் தெய்வமாகலாம் படத் தலைப்பை வெளியிட்ட தனுஷ்
09 Sep 2025வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை நடிகர் தனுஷ் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
-
நேபாளத்தில் அரசுக்கு எதிராக போராட்டம்: பிரதமர் பதவியில் இருந்து கே.பி.சர்மா ஒலி ராஜினாமா
09 Sep 2025காட்மாண்டு, நேபாள அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் குறித்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் கே.பி. சர்மா ஒலி.
-
என்னால் உயிர் வாழ முடியாது: நீதிபதியிடம் நடிகர் தர்ஷன் முறையீடு
09 Sep 2025பெங்களூரு : பல நாட்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. எனது கைகளில் பூஞ்சை உருவாகியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் என்னால் உயிர் வாழ முடியாது.
-
தமிழ்நாடு அரசு சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு வரும் 13-ம் தேதி பாராட்டு விழா
09 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசு சார்பில் வருகிற 15-ம் தேதி இளையராஜாவுக்கு பராட்டு விழா நடக்கிறது. இதில் முக்கிய திரை பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.
-
பிரிக்ஸ் அமைப்பு குறித்து ட்ரம்ப் ஆலோசகர் விமர்சனம்
09 Sep 2025நியூயார்க், பிரிக்ஸ் அமைப்பு குறிதது அதிபர் ட்ரம்ப் ஆலோசகர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
-
காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனே விடுதலை செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
09 Sep 2025சென்னை : காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
-
கோவையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பிரசாரம் - ரோடு ஷோ
09 Sep 2025கோவை : கோவையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பிரசாரம் மற்றும் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.
-
சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
09 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு
-
அமித்ஷாவை சந்தித்தது ஏன்? - செங்கோட்டையன் விளக்கம்
09 Sep 2025டெல்லி : அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததுக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.
-
2026 சட்டமன்ற தேர்தலில் நாம் பெறும் வெற்றி, தி.மு.க.வுக்கான வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகத்திற்கான வெற்றி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Sep 2025சென்னை, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கம் நம்மால்தான் முடியும், 2026-ல் நாம் பெறும் வெற்றி, தி.மு.க.வுக்கான வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான வெற்றி என
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சோனியா, கார்கே, பிரியங்கா, ராகுல் காந்தி வாக்களித்தனர்
09 Sep 2025புதுடெல்லி : குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (செப். 9) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
-
காசாவில் இருக்கும் அனைவரும் வெளியேற வேண்டும் : இஸ்ரேல்
09 Sep 2025டெல் அவிவ், முழுமையான ராணுவ நடவடிக்கை தொடங்க இருப்பதால், காசா திட்டுப்பகுதியில் வசிக்கும் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
-
2030-ம் ஆண்டுக்குள் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டம்
09 Sep 2025சென்னை, “எத்தனையோ இடர்கள், எத்தனையோ தடைக்கற்கள், எத்தனையோ சூழ்ச்சி அரசியல்கள்...
-
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணைய உத்தரவு நிறுத்திவைப்பு
09 Sep 2025சென்னை : தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறிதது ஒரு நபர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளது: அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
09 Sep 2025சென்னை : அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
-
கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாடு: பிரதமர் தொடங்கி வைக்கிறார்
09 Sep 2025புதுடெல்லி, கொல்கத்தாவில் முப்பட தளபதிகள் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
-
துணை ஜனாதிபதி தேர்தல்: முதல் நபராக வாக்களித்த பிரதமர்
09 Sep 2025புதுடெல்லி, நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெறும் என த
-
செப்.19 ல் வெளியாகும் படையாண்ட மாவீரா
09 Sep 2025இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் படையாண்ட மாவீரா. இந்த திரைப்படத்தில் வ.
-
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாளை டெல்லி பயணம்
09 Sep 2025சென்னை, தமீழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனு: அபராதத்துடன் ஐகோர்ட் தள்ளுபடி
09 Sep 2025சென்னை : தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை 1 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
-
இஸ்ரேலுக்கு ஆதரவு: பிரதமர் மோடிக்கு நெதன்யாகு நன்றி
09 Sep 2025ஜெருசலேம், பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.