முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என்பதா? ஈரோடு அரசு விழாவில் கவர்னருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

புதன்கிழமை, 26 நவம்பர் 2025      தமிழகம்
CM-1-2025-11-26

ஈரோடு, தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார். அவருடைய திமிரை அடக்கவேண்டும் என்றும், தாய்மொழிப் பற்று பற்றி தமிழ்நாட்டிற்கு கவர்னர் வகுப்பெடுக்க வேண்டாம் அந்த பாடத்தில் பி.எச்.டி. வாங்கியவர்கள் நாங்கள் என்றும் ஈரோட்டில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- மத்திய பா.ஜ.க. தமிழ்நாட்டிற்கு கொடுக்கின்ற குடைச்சல் போதாது என்று தமிழ்நாட்டின் வளர்ச்சியை நிரந்தரமாக கெடுக்க வேண்டும் என்றே ஒருவரை மத்திய பா.ஜ.க. அரசு கவர்னர் ஆர்.என்.ரவியை நியமித்திருக்கிறார்கள். அவர் சமீபத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு சேவையாற்ற அவர் வந்திருப்பதாக சொன்னதை கேட்டதுமே, சிரிப்புதான் வந்தது. தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்கிறதாம். தீவிரவாதப் போக்கு நிலவும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதாம். தமிழ்மொழி வளர்ச்சிக்காக இங்கே எதுவும் நடக்கவில்லையாம். எல்லோரும் ஆங்கிலம் படிக்கிறார்களாம். இப்படியெல்லாம் அவதூறு, ஆற்றாமை கலந்து புலம்பியிருக்கிறார் ஆளுநர்.

மத்திய பா.ஜ.க. ஆட்சியில்தான் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்து, சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் பலியானார்கள்? மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தான் டெல்லி செங்கோட்டை அருகில் குண்டுவெடிப்பு நடந்து அங்கே மக்கள் பல பேர் பலியானார்கள்? பா.ஜ.க. ஆட்சியில்தான் மணிப்பூர் பற்றி இன்றைக்கு எரிந்து கொண்டிருக்கிறது? தீவிரவாதத் தாக்குதல்களில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத பா.ஜ.க. ஆட்சியை புகழ்ந்து பேசியிருக்கின்ற கவர்னர் அவர்கள், அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார். அவருடைய திமிரை அடக்கவேண்டும்.

இக்கட்டான சூழல்களில் எல்லாம், தன்னுடைய தேசப்பற்றைக் காட்டி, நம்முடைய படை வீரர்களுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்குவது நம்முடைய தமிழ்நாடுதான். அப்படிப்பட்ட தமிழர்களை தேச விரோதிகளாக சித்தரிக்கின்ற கவர்னரின் பேச்சு என்பது வன்மையான கண்டனத்திற்குரியது. பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்பதுபோல பேசுகிறார். அவர் வகிக்கின்ற அரசியல் சாசனப் பொறுப்புக்குத் துளியும் பொருத்தமற்ற, தகுதியற்ற தரக்குறைவான பேச்சு இது

எங்கள் பிள்ளைகள் உலக வாய்ப்புகளுக்காக ஆங்கிலம் படிக்கிறார்கள். அதில், உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்களுக்கு எங்கே எரிகிறது? இன்னும் டபுள் மடங்கு ஆர்வமாக நாங்கள் ஆங்கிலம் படிக்க தயாராக இருக்கிறோம். இந்தியா முழுவதும் இந்தி பேசாத மாநில மொழிகள் இன்றைக்கு உயிர்ப்யுடன் இருக்கும் என்றால், அதற்கு காரணமே தமிழ்நாடு உயிரைக் கொடுத்து மொழிப்போரில் ஈடுபட்டதுதான். தாய்மொழிப் பற்று பற்றி தமிழ்நாட்டிற்கு நீங்கள் வகுப்பெடுக்க வேண்டாம் அந்த பாடத்தில் பி.எச்.டி. வாங்கியவர்கள் நாங்கள்.

சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலைஞர் பேரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்காக மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைத்தால், அனுமதி கொடுக்காமல், மூன்று மாதம் கிடப்பில் வைத்து விட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். நான் கேட்கிறேன்… குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கின்ற அளவுக்கு, அதில் என்ன அரசியலமைப்புச் சட்ட பிரச்சினை இருக்கிறது? அவர் கிடப்பில் போட்டதை மறைக்க, குடியரசுத் தலைவர் மேல் பழியை போட்டு தப்பிக்க பார்க்கிறார்.

“கலைஞர்” பேர் வைக்கக் கூடாது என்று மாணவர்களின் நலனில் விளையாடுவது என்ன நியாயம்? மக்களாட்சியை மதித்து, இதற்கான உரிய அனுமதியை விரைவில் கொடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறேன். இல்லையென்றால், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரையே நேரில் சந்தித்து கோரிக்கை வைப்பார்கள். விரைவில் நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. அந்த நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள்! ஆனால், ஒன்று, கவர்னர் ரவி அவர்களே, நீங்கள் இப்படிதான் தொடர்ந்து பேசவேண்டும். உங்களுடைய தமிழ் வெறுப்பை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும்! நீங்கள் பேச பேசத்தான் எங்களுடைய வேலையும் ஈசியாகும்.

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் சோஷியல் மீடியாவில் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். 2024-25-ம் ஆண்டில், புதிய வழித்தடத்துக்கு ரெயில்வே துறையால், 31 ஆயிரத்து 458 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் நம்முடைய தெற்கு ரெயில்வேக்கு வெறும் 301 கோடிதான் ஒதுக்கியிருந்தார்கள். அதாவது, ஒரே ஒரு பர்செண்ட். ஒவ்வொரு முறையும் நம்முடைய பிரதமர் அவர்களை நான் சந்திக்கும்போதும், மறக்காமல் நான் வைக்கின்ற முக்கியமான கோரிக்கை - தமிழ்நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்ற புதிய ரெயில் திட்டங்களை நிறைவேற்றவேண்டும் என்பதுதான். ஆனால், அதற்கு அவர்கள் எடுத்திருக்கின்ற நடவடிக்கை என்ன? இந்த, ‘ஒன் பர்செண்ட்’ நிதி ஒதுக்கீடுதான். இதற்கு என்ன அர்த்தம்? “வரி வசூலிக்க மட்டும் தமிழ்நாடு; நிதி ஒதுக்கீட்டில் பட்டை நாமத்தை போடுகிறது.

பா.ஜ.க.-வின் ஆட்சி. இதிலிருந்து பா.ஜ.க. நமக்கு சொல்லாமல் சொல்லுகின்ற மெசேஜ் அரசியல் லாபங்களுக்காக பொதுமக்களை பழிவாங்கும் இந்த அற்ப அரசியல்தான் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு தொடர் தோல்வியை அளித்துக் கொண்டிருக்கிறது. முதுகெலும்பை இழந்து கர்சீப்பால் முகத்தை மூடிவிட்டு சுத்துகின்ற பழனிசாமி அவர்களின் துரோக அரசியல்தான் அவருக்கு, ‘பத்து தோல்வி பழனிசாமி’ என்ற பட்டப்பேரை பெற்றுத் தந்திருக்கிறது. மக்கள் மீதான எங்களின் உண்மையான அக்கறையும், மாநில உரிமைக்கான போராட்டமும்தான் எங்களுக்கு தொடர் வெற்றியை அளித்து வருகிறது. கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுகிறோம். அதுவும், மத்திய பா.ஜ.க. அரசு அளிக்கின்ற தொல்லைகள், செயற்கை பேரிடர்கள் அதையும் மீறியும் நிறைவேற்றுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து