முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன் கோவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப். 26 -​ சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் 3 பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.இது பற்றி விபரம் வருமாறு:- சங்கரன் கோவில் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான சொ.கருப்பசாமி மரணமடைந்ததையொட்டி அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. என 5 அரசியல் கட்சிகள் வேட்பாளரை நிறுத்தியுள்ள இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் உன்னிப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நேற்று தேர்தல் வேலைகளை கண்காணிக்க 3 பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் அதிகாரி பிரவின்குமார் வெளியிட்டுள்ளார்.

தேர்தல் செலவீனங்களை கண்காணிக்க பி.நரசிம்வரராவ் என்பவரை நியமித்துள்ளது. இவர் குஜராத் மாநில சுங்கத்துறை இணை ஆணையர் பொறுப்பு வகித்து வருகிறார். பொது விஷயங்களுக்கான பார்வையாளராக ரமேஷ்குமார் சுதான்ஸீ என்பவரை நியமித்துள்ளனர். இவர் உத்தரகாண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையர் மற்றும் கூடுதல் செயலாளராக உள்ளார்.

காவல்துறை பார்வையாளராக வி.ஜே.கவுதம் என்பவரை நியமித்துள்ளது. இவர் குஜராத் மாநில காவல்துறை டி.ஐ.ஜி.யாக உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்