எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் 24 - காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஐவர் குழுவை நிராகரித்து தங்கபாலு கொடுத்த லிஸ்டை சோனியா நிராகரித்தார். இரு முறைக்கு மேல் வாய்ப்பில்லை என்பதால் பல முக்கிய தலைவர்களுக்கு எம்.எல்.ஏ. பதவி கிடைக்காது என தெரிகிறது.
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் ஆரம்பம் முதலே இழுபறி நீடித்து வருகிறது. இட ஒதுக்கீடு முதல் பிரச்சினை ஆரம்பித்து தற்போது வேட்பாளர்களை இறுதிப்படுத்துவதில் வந்து நிற்கிறது. தி.மு.க., காங்கிரஸ் உறவு உறுதியாக இருக்கிறது என்று கூறி வந்தவர்கள் பிறகு ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு டெல்லி வரை ராஜினாமா கடிதத்தோடு சென்று சமாதானமானது காலம் முழுவதும் சொல்லி கைகொட்டி சிரிக்க வேண்டிய வரலாறு.
காங்கிரஸ் தரப்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. ஐவர் குழுவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சேர்க்காததால் அவர்கள் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு உண்ணாவிரதம் இருந்தனர். ஐவர் குழு தி.மு.க.விடம் சீட் கேட்டு பெறுவதை விட தங்கள் கோஷ்டிக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களை ஒதுக்குவது என்று போட்டியிட்டதை கருணாநிதி தனக்கு சாதகமாக்கிக் கொள்ள பார்த்தார். ஒரு மலையையும் சிறு உளி உடைத்து விடும் என்பது போல் கருணாநிதியின் பேரன் வயசு உள்ள ராகுல் கருணாநிதியின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி காங்கிரசுக்கு வேண்டிய தொகுதிகளை பெற்றார். தி.மு.க. தனது பலமான 8 தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டு கொடுக்க வேண்டியதாகி விட்டது. 63 தொகுதிகளாக தனது எண்ணிக்கையில் காங்கிரஸ் வளர்த்துக் கொண்டது. இதனிடையே காங்கிரசில் இளங்கோவன் கோஷ்டி பட்டியல், யுவராஜாவின் இளைஞர் காங்கிரசார் பட்டியல், ஜி.கே.வாசன் கோஷ்டி, சிதம்பரம் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி என அனைவருக்கும் 63 தொகுதிகளுக்குள் பிரித்தாக வேண்டிய நிலைமை.
இங்கு இரண்டு நாள் விருப்ப மனு பெற்று அனைத்து மனுக்களையும் டெல்லிக்கு எடுத்துச் சென்றனர். அங்கு வேட்பாளர் பட்டியலை இறுதிப்படுத்தும் பணியை ஐவர் குழுவை நிராகரித்தது. தங்கபாலுவை போட்டு வயலார் ரவி, அகமது பட்டேல், ஆசாத் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்தார் சோனியா. தமிழ்நாட்டை பற்றி நன்கு அறிந்த சிதம்பரம், வாசன், ஈ.வி.கே.எஸ்., ஜெயக்குமார் முதலியவர்களை பயன்படுத்தாமல் தங்கபாலுவை மட்டுமே போட்டு வேட்பாளர் பட்டியலை தயாரிக்க நினைத்தது தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை உண்டு பண்ணியது.
தங்கபாலு, ஆஸ்கர், ஆசாத், வயலார் ரவி, அகமது பட்டேல் ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை ஒரு பட்டியலை தயாரித்தனர். வெளிநாடு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை டெல்லி திரும்பிய சோனியாவிடம் மேற்கண்ட குழுவினர் தயாரித்த பட்டியல் தரப்பட்டது. அதில் தங்கபாலுவின் மனைவி முதல் வேண்டிய பட்டவர்களுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பதும், பழைய தி.மு.க. விசுவாசிகளே மீண்டும் பெயர் பட்டியலில் இருப்பதை தெரிந்து கொண்ட சோனியா பட்டியலை நிராகரித்துள்ளார். போய் புது பட்டியல் தயாரித்து வாருங்கள், 2 முறை எம்.எல்.வாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று கூறி விட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கபாலு குழுவினர் புதுப்பட்டியலை தயாரித்து வருகிறார்களாம்.
இரண்டு முறைக்கு மேல் எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்களுக்கு பதவி இல்லையென்றால் காங்கிரசில் உள்ள பல பெரிய தலைவர்கள் உருளும் என தெரிகிறது. தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. டி.யசோதா, பீட்டர் அல்போன்ஸ் (கடையநல்லூர்) ,ஞானசேகரன் (வேலூர்), டி.அமரமூர்த்தி (அரியலூர்), கோபிநாத் (ஓசூர்), சிவராஜ் (ரிஷிவந்தியம்), கோவை தங்கம் (வால்பாறை), ராம்பிரபு (பரமகுடி), கே.ஆர்.ராமசாமி (திருவாடனை), சுந்தரம்(காரைக்குடி), வேல்துரை (சேரன்மாதேவி), டாக்டர் இ.எஸ்.ராமன் (பள்ளிப்பட்டு), என்.ஆர்.ரங்கராஜன் (பட்டுக்கோட்டை) ஆகியோருக்கு மீண்டும் சீட் கிடைக்காது. இதில் பலரும் ஜி.கே.வாசன் கோஷ்டி. பலர் கருணாநிதியின் விசுவாசிகள். (காங்கிரசில் உள்ள கருணாநிதி கோஷ்டி) இவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டால் கருணாநிதி காங்கிரசுக்குள் காய் நகர்த்தும் பல வேலைகள் நடைபெறாது. இதுபோக எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்,பி.வி.ராஜேந்திரன், குமாரதாஸ், டாக்டர் செல்லக்குமார், ஜெயக்குமார் ஆகியோருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது. இதனால் காங்கிரசுக்குள் குத்து வெட்டு மேலும் அதிகமாகும் என தெரிகிறது. தங்கபாலு தனது மனைவிக்கு மயிலாப்பூரில் சீட்டு வாங்கி தருவதால் அங்கு போட்டியிடும் எண்ணத்தில் உள்ள கராத்தே தியாகராஜன் கடும் வெறுப்பில் உள்ளார்.
வேட்பு மனுதாக்கல் 19-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிய உள்ளது. இன்னும் சில தினங்கள் மட்டும் உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலே தயாரிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இன்று பட்டியல் வெளியானால் இரண்டு நாளைக்குள் வேட்பாளர் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர் பட்டியல் வெளியிட்டவுடன் காங்கிரசில் பெரும் ரகளை காத்திருக்கிறது. தற்போது டெல்லியில் இருக்கும் யசோதாவிற்கு சீட் தராவிட்டால் அங்கேயே தீக்குளிப்பேன் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் டெல்லியிலும், சென்னை சத்தியமூர்த்திபவனிலும் தங்கபாலுவின் கொடுபாவியை கொளுத்த எதிர்ப்பாளர்கள் தயாராகி வருவதால் சென்னை சத்தியமூர்த்தி பவனில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சோனியாவின் திட்டப்படி பழைய தலைகளை புறக்கணித்துவிட்டு புதுமுகங்களை போட்டால் பெரும் ரகளை வெடிக்கும். தமிழகம் முழுவதும் தொகுதிகளில் அதன் பிரதிபலிப்பு இருக்கும். புதுமுகங்களை ஜெயிக்க விடாமல் பழைய தலைகள் உள்வேலைகள் செய்யும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தி.மு.க.வை நெருக்கி தொகுதிகளை பிடுங்கியதால் தனக்கு 2 கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு 1 கண் போக வேண்டும் என்று தி.மு.க. மேலிடம் முதல் தொண்டர்கள் வரை முடிவெடுத்து உள்ளதால் பிரச்சினை உள்ளது. இதில் இந்த பிரச்சினையும் உள்ளதால் தமிழகத்தில் பல தொகுதிகளிலும் காங்கிரஸ் வெல்வது கேள்விக்குறியே.
தன்னால் நடக்க முடியாதவன் ஓடுகிறவனை குறை சொன்னானாம். அதுபோல் தற்போது இவர்களுக்குள் ஆயிரம் குத்துவெட்டு, குழிப்பறிப்பு, கூட்டணி மோதல் இருக்கும்போது நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று உள்ளுக்குள் பொறுமியபடி தி.மு.க. கூட்டணி தலைவர்கள் பேட்டி அளிப்பதுதான் விந்தையிலும் விந்தை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.