தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச் 24 - காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஐவர் குழுவை நிராகரித்து தங்கபாலு கொடுத்த லிஸ்டை சோனியா நிராகரித்தார். இரு முறைக்கு மேல் வாய்ப்பில்லை என்பதால் பல முக்கிய தலைவர்களுக்கு எம்.எல்.ஏ. பதவி கிடைக்காது என தெரிகிறது.
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் ஆரம்பம் முதலே இழுபறி நீடித்து வருகிறது. இட ஒதுக்கீடு முதல் பிரச்சினை ஆரம்பித்து தற்போது வேட்பாளர்களை இறுதிப்படுத்துவதில் வந்து நிற்கிறது. தி.மு.க., காங்கிரஸ் உறவு உறுதியாக இருக்கிறது என்று கூறி வந்தவர்கள் பிறகு ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு டெல்லி வரை ராஜினாமா கடிதத்தோடு சென்று சமாதானமானது காலம் முழுவதும் சொல்லி கைகொட்டி சிரிக்க வேண்டிய வரலாறு.
காங்கிரஸ் தரப்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. ஐவர் குழுவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சேர்க்காததால் அவர்கள் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு உண்ணாவிரதம் இருந்தனர். ஐவர் குழு தி.மு.க.விடம் சீட் கேட்டு பெறுவதை விட தங்கள் கோஷ்டிக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களை ஒதுக்குவது என்று போட்டியிட்டதை கருணாநிதி தனக்கு சாதகமாக்கிக் கொள்ள பார்த்தார். ஒரு மலையையும் சிறு உளி உடைத்து விடும் என்பது போல் கருணாநிதியின் பேரன் வயசு உள்ள ராகுல் கருணாநிதியின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி காங்கிரசுக்கு வேண்டிய தொகுதிகளை பெற்றார். தி.மு.க. தனது பலமான 8 தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டு கொடுக்க வேண்டியதாகி விட்டது. 63 தொகுதிகளாக தனது எண்ணிக்கையில் காங்கிரஸ் வளர்த்துக் கொண்டது. இதனிடையே காங்கிரசில் இளங்கோவன் கோஷ்டி பட்டியல், யுவராஜாவின் இளைஞர் காங்கிரசார் பட்டியல், ஜி.கே.வாசன் கோஷ்டி, சிதம்பரம் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி என அனைவருக்கும் 63 தொகுதிகளுக்குள் பிரித்தாக வேண்டிய நிலைமை.
இங்கு இரண்டு நாள் விருப்ப மனு பெற்று அனைத்து மனுக்களையும் டெல்லிக்கு எடுத்துச் சென்றனர். அங்கு வேட்பாளர் பட்டியலை இறுதிப்படுத்தும் பணியை ஐவர் குழுவை நிராகரித்தது. தங்கபாலுவை போட்டு வயலார் ரவி, அகமது பட்டேல், ஆசாத் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்தார் சோனியா. தமிழ்நாட்டை பற்றி நன்கு அறிந்த சிதம்பரம், வாசன், ஈ.வி.கே.எஸ்., ஜெயக்குமார் முதலியவர்களை பயன்படுத்தாமல் தங்கபாலுவை மட்டுமே போட்டு வேட்பாளர் பட்டியலை தயாரிக்க நினைத்தது தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை உண்டு பண்ணியது.
தங்கபாலு, ஆஸ்கர், ஆசாத், வயலார் ரவி, அகமது பட்டேல் ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை ஒரு பட்டியலை தயாரித்தனர். வெளிநாடு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை டெல்லி திரும்பிய சோனியாவிடம் மேற்கண்ட குழுவினர் தயாரித்த பட்டியல் தரப்பட்டது. அதில் தங்கபாலுவின் மனைவி முதல் வேண்டிய பட்டவர்களுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பதும், பழைய தி.மு.க. விசுவாசிகளே மீண்டும் பெயர் பட்டியலில் இருப்பதை தெரிந்து கொண்ட சோனியா பட்டியலை நிராகரித்துள்ளார். போய் புது பட்டியல் தயாரித்து வாருங்கள், 2 முறை எம்.எல்.வாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று கூறி விட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கபாலு குழுவினர் புதுப்பட்டியலை தயாரித்து வருகிறார்களாம்.
இரண்டு முறைக்கு மேல் எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்களுக்கு பதவி இல்லையென்றால் காங்கிரசில் உள்ள பல பெரிய தலைவர்கள் உருளும் என தெரிகிறது. தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. டி.யசோதா, பீட்டர் அல்போன்ஸ் (கடையநல்லூர்) ,ஞானசேகரன் (வேலூர்), டி.அமரமூர்த்தி (அரியலூர்), கோபிநாத் (ஓசூர்), சிவராஜ் (ரிஷிவந்தியம்), கோவை தங்கம் (வால்பாறை), ராம்பிரபு (பரமகுடி), கே.ஆர்.ராமசாமி (திருவாடனை), சுந்தரம்(காரைக்குடி), வேல்துரை (சேரன்மாதேவி), டாக்டர் இ.எஸ்.ராமன் (பள்ளிப்பட்டு), என்.ஆர்.ரங்கராஜன் (பட்டுக்கோட்டை) ஆகியோருக்கு மீண்டும் சீட் கிடைக்காது. இதில் பலரும் ஜி.கே.வாசன் கோஷ்டி. பலர் கருணாநிதியின் விசுவாசிகள். (காங்கிரசில் உள்ள கருணாநிதி கோஷ்டி) இவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டால் கருணாநிதி காங்கிரசுக்குள் காய் நகர்த்தும் பல வேலைகள் நடைபெறாது. இதுபோக எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்,பி.வி.ராஜேந்திரன், குமாரதாஸ், டாக்டர் செல்லக்குமார், ஜெயக்குமார் ஆகியோருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது. இதனால் காங்கிரசுக்குள் குத்து வெட்டு மேலும் அதிகமாகும் என தெரிகிறது. தங்கபாலு தனது மனைவிக்கு மயிலாப்பூரில் சீட்டு வாங்கி தருவதால் அங்கு போட்டியிடும் எண்ணத்தில் உள்ள கராத்தே தியாகராஜன் கடும் வெறுப்பில் உள்ளார்.
வேட்பு மனுதாக்கல் 19-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிய உள்ளது. இன்னும் சில தினங்கள் மட்டும் உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலே தயாரிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இன்று பட்டியல் வெளியானால் இரண்டு நாளைக்குள் வேட்பாளர் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர் பட்டியல் வெளியிட்டவுடன் காங்கிரசில் பெரும் ரகளை காத்திருக்கிறது. தற்போது டெல்லியில் இருக்கும் யசோதாவிற்கு சீட் தராவிட்டால் அங்கேயே தீக்குளிப்பேன் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் டெல்லியிலும், சென்னை சத்தியமூர்த்திபவனிலும் தங்கபாலுவின் கொடுபாவியை கொளுத்த எதிர்ப்பாளர்கள் தயாராகி வருவதால் சென்னை சத்தியமூர்த்தி பவனில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சோனியாவின் திட்டப்படி பழைய தலைகளை புறக்கணித்துவிட்டு புதுமுகங்களை போட்டால் பெரும் ரகளை வெடிக்கும். தமிழகம் முழுவதும் தொகுதிகளில் அதன் பிரதிபலிப்பு இருக்கும். புதுமுகங்களை ஜெயிக்க விடாமல் பழைய தலைகள் உள்வேலைகள் செய்யும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தி.மு.க.வை நெருக்கி தொகுதிகளை பிடுங்கியதால் தனக்கு 2 கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு 1 கண் போக வேண்டும் என்று தி.மு.க. மேலிடம் முதல் தொண்டர்கள் வரை முடிவெடுத்து உள்ளதால் பிரச்சினை உள்ளது. இதில் இந்த பிரச்சினையும் உள்ளதால் தமிழகத்தில் பல தொகுதிகளிலும் காங்கிரஸ் வெல்வது கேள்விக்குறியே.
தன்னால் நடக்க முடியாதவன் ஓடுகிறவனை குறை சொன்னானாம். அதுபோல் தற்போது இவர்களுக்குள் ஆயிரம் குத்துவெட்டு, குழிப்பறிப்பு, கூட்டணி மோதல் இருக்கும்போது நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று உள்ளுக்குள் பொறுமியபடி தி.மு.க. கூட்டணி தலைவர்கள் பேட்டி அளிப்பதுதான் விந்தையிலும் விந்தை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
டி-20 உலக கோப்பை : இந்திய அணியில் அஸ்வினை சேர்க்க வேண்டும் - கவாஸ்கர்
24 May 2022மும்பை : பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்து வரும் அஸ்வினை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர்
-
10-ம் வகுப்பு கணிதத்தேர்வை எழுதாத 45,618 மாணவர்கள் : தமிழக தேர்வுத்துறை தகவல்
24 May 2022சென்னை : நேற்று நடைபெற்ற தேர்வில் 45,618 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
-
இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் சிறந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா : வீரேந்திர சேவாக் புகழாரம்
24 May 2022மும்பை : பேட்டிங் செய்யும்போது காட்டும் அதே ஆக்ரோஷத்தை, கேப்டனாகவும் காட்டுவார் என்று நினைத்தேன்.
-
விராட் கோலி, ரோகித் சர்மா மீண்டும் ரன்களை குவிக்க தொடங்குவார்கள் : பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி நம்பிக்கை
24 May 2022மும்பை : விராட் கோலி மற்றும் ரோகித் இருவர் குறித்தும் கங்குலி பேசுகையில், "அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள்.
-
ரெய்னாவின் பங்களிப்பை நாம் மறந்து விடுகிறோம் : முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து
24 May 2022மும்பை : சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பை நாம் மறந்து விடுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடர்: பல இளம் வீரர்களுக்கு வாய்பளிக்க தவானை தேர்வு செய்யாத டிராவிட்
24 May 2022மும்பை : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் தவான் தேர்வு செய்யப்படாதது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எடுத்த முடிவு என தெரியவந்துள்ளது.
-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு
24 May 2022சென்னை : தமிழகத்தில் நேற்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
அடுத்த ஐ.பி.எல்-லில் இருப்பேன்: ஆர்சிபி ஜாம்பவான் டிவில்லியர்ஸ்
24 May 2022தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ், மொத்தம் 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
-
பகை உணர்வு எதுவும் இல்லை ; மேரிகோமை மன்னித்துவிட்டேன் : தங்கம் வென்ற நிகத் ஐரீன் பேட்டி
24 May 2022மும்பை : மேரி கோம்மை மன்னித்துவிட்டதாக உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிகத் ஐரீன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 25-05-2022
25 May 2022 -
ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு
25 May 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை நேரில் சந்தித்து நலம் வ
-
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
25 May 2022பியாங்கியாங் : அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜப்பானில் நடந்த குவாட் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தனது நாட்டுக்கு புறப்பட்ட சில மணி நேரத்தில் வடகொரியா ஏவுகணை ச
-
கொலை முயற்சியில் உயிர் தப்பிய புடின் : உக்ரைன் அதிகாரி திடுக்கிடும் தகவல்
25 May 2022கீவ் : ரஷ்ய அதிபர் புடினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் தப்பித்ததாகவும் உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு : முற்றுப்புள்ளி வைப்பது எப்போது என பைடன் ஆதங்கம்
25 May 2022டெல்சாஸ் : அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது.
-
சென்னையில் வரும் 3-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : தே.மு.தி.க. அறிவிப்பு
25 May 2022சென்னை : சென்னையில் வரும் 3-ம் தேதி தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நாசா வெளியிட்ட கேலக்ஸியின் புதிய புகைப்படம் வைரல்
25 May 2022நியூயார்க் : நாசா விண்வெளி ஆய்வு மையம் கேலக்ஸியின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
-
நிதித்துறை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்பு
25 May 2022கொழும்பு : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூடுதல் பொறுப்பாக நிதித்துறை அமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு
25 May 2022லண்டன் : உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
கடந்த 3 ஆண்டுகளில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் 20,100 குவிண்டால் ரேசன் அரிசி பறிமுதல் : குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை விளக்கம்
25 May 2022சென்னை : கடந்த 3 ஆண்டுகளில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் 20,100 குவிண்டால் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது
-
இந்து கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்
25 May 2022சென்னை : இந்து கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
மேட்டூர் அணை நீர்வரத்து 8,539 கன அடியாக சரிவு
25 May 2022சேலம் : மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று 8,539 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 117.92 அடியாக உள்ளது.
-
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்
25 May 2022சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சி மடுவண்கரை, கிண்டி மற்றும் ஆலந்தூர் (எம்.கே.என்.நகர்) பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய
-
இளைஞர் சக்தியை உருவாக்க கல்வியை தந்தாக வேண்டும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
25 May 2022சென்னை : இளைஞர் சக்தியை உருவாக்க கல்வியை தந்தாக வேண்டும். அடிப்படை கல்வி மட்டுமல்ல உயர்கல்வியும் தந்தாக வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு : அரசு சேவைகள் தொய்வின்றி வழங்க உத்தரவு
25 May 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கிண்டி, வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
-
அமைச்சர் சாமிநாதனின் தாயார் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
25 May 2022சென்னை : தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.