முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரவைச் செயலாளர் படுகொலை: முதல்வர் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.14 - கரூர் நகர 4வது வார்டு பேரவைச் செயலாளர் ஆர்.சக்திவேல் படுகொலை சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ள அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவரது குடும்பத்தாருக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதுடன் ரூ.1 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-

கரூர் மாவட்டம், கரூர் நகர 4 வது வார்டு ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஆர்.சக்திவேல் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.இந்தப் படுகொலையைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.அன்புச் சகோதரர் சக்திவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும் இவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்