முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயாவதியின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 2 மடங்கானது

வியாழக்கிழமை, 15 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ,மார்ச்.15 - உத்தர பிரதேசத்தின் முதல்வராக இருந்த கடந்த 5 ஆண்டு காலத்தில் மாயாவதியின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 25 சதவீதம் அதிகரித்து ரூ. 111 கோடியை தொட்டிருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக அவர் மனுத்தாக்கல் செய்தார். அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணத்தில் அவரது சொத்து மதிப்பு குறிப்பிடப்பட்டிருந்தது. 

பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் பல்வேறு கிளைகளில் மொத்தம் ரூ. 13.95 கோடியும், கையில் ரூ. 10.20 லட்சமும் வைத்திருப்பதாக மாநிலங்களவைக்கு தாக்கல் செய்திருக்கும் மனுவில் மாயாவதி குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஒரு கிலோ தங்க நகைகள், 380.17 காரட் வைரம், 18.5 கிலோ வெள்ளி பாத்திரங்கள் போன்றவை தம்மிடம் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். 2010 ம் ஆண்டில் சட்ட மேலவைக்கு போட்டியிட்ட போது அவரது சொத்து மதிப்பு ரூ. 88 கோடியாகவும், 2007 ம் ஆண்டில் ரூ. 52.27 கோடியாகவும் இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்