முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் கட்டண உயர்வு சரத்யாதவ் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

சாகர்ஷா,(பீகார்), மார்ச். - 18 - ரயில் கட்டண உயர்வு குறித்து ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் விமர்சித்துள்ளார்.  ரயில்வே துறை வளர்ச்சியடைய வேண்டும் என்று மத்திய அரசு உண்மையிலேயே விரும்பினால் அந்த துறைக்கு மத்திய அரசு ஒரு சிறப்பு நிதி திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இது குறித்து பீகாரில் சாகர்ஷா என்ற இடத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர்,  இந்த கட்டண உயர்வு ரயில்வே துறைக்கு போதாது. எனவே மத்திய அரசு அதன் வளர்ச்சியை விரும்பினால் சிறப்பு நிதியை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ரயில்வே துறையின் தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து மத்திய அரசு அக்கறை கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்