முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் காந்தி கொலை: தூக்கு தண்டனை வழக்கு தள்ளிவைப்பு

புதன்கிழமை, 28 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

சென்னை, மார்ச்.28 - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனை வழக்கு தள்ளிவைக்கப்பட்டது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன். இவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தள்ளுபடி செய்தார். எனவே இதை எதிர்த்து 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் விசாரித்து 3 பேரையும் தூக்கில் போட இடைக்கால தடை விதித்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி கொலை வழக்குகளில் தூக்கு தண்டனை பெற்ற முல்லர், அசாமை சேர்ந்த பாஸ் ஆகியோரது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது. அந்த விசாரணை நிலைமையை பார்த்து பின்னர் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து வழக்கை வருகிற 30​ந்தேதி (வெள்ளிக்கிழமை) தள்ளி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்