முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று மகவீர் ஜெயந்தி லோக்சபை சபாநாயகர் மீராகுமார் வாழ்த்து

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஏப்.- 5 - இன்று மகாவீர் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாட்டு மக்களுக்கு லோக்சபை சபாநாயகர் மீராகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மீரா குமார் கூறியுள்ள வாழ்த்து செய்தியில் மகாவீரின் புனிதமான வாழ்க்கையும் அவரது போதனைகளும் நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் ஒரு ஊக்குவிப்பாக இருக்கிறது. அதோடுமட்டுமல்லாது நாட்டு மக்களிடையே இறக்கம், அகிம்சை, நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவித்து வருகிறது. அவருடைய போதனைகள் இன்றைய காலக்கட்டத்திற்கும் ஏற்றவாறு ள்ளது என்று தெரிவித்துள்ளார். நன்னடத்தை மற்றும் ஆன்மீகம் மூலம் அமைதியையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்வதற்கும் மகாவீர் போதனைகள் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது. உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க மகாவீர் போதனைகளின்படி நாம் அனைவரும் மறுஅர்ப்பணம் செய்வோம். நமது நாட்டின் மதசார்பற்ற தன்மையை வலுப்படுத்த மகாவீர் போதனைகளையும் அறிவுரைகளையும் பின்பற்றி நடப்போம் என்று அந்த வாழ்த்து செய்தியில் மீரா குமார் மேலும் கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்