முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிர கவர்னருடன் பிரணாப் முகர்ஜி சந்திப்பு

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, மார்ச் - 28 - மகாராஷ்டிர கவர்னர் கே. சங்கரநாராயணனை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சந்தித்து பேசினார். மும்பையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் அசோசெம் ஏற்பாடு செய்திருந்த  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக  மத்திய நிதி அமைச்சர்  பிரணாப் முகர்ஜி நேற்று மும்பை வந்திருந்தார்.  அப்போது கவர்னர் மாளிகைக்கு சென்ற பிரணாப் முகர்ஜி அங்கு கவர்னர் கே.சங்கரநாராயணனை சந்தித்து பேசினார்.

இவர்கள் இருவரும் தனியாக சந்தித்து பேசியதாகவும், இந்த சந்திப்பு 30 நிமிடம் நடந்ததாகவும் கவர்னர் மாளிகை வட்டாரங்கள் கூறின. ஆனால் என்ன பேசினார்கள் என்ற விவரத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்