முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெற்றோர் திருமணத்தை முடித்து திருப்பரங்கிரி திரும்பிய முருகப்பெருமான்

திங்கட்கிழமை, 7 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், மே. - 7- மதுரை மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற முருகப்பெருமான் தெய்வயானையுடன் பூப்பல்லக்கிலும், தாரை வார்த்துக்கொடுத்த பவளகனிவாய் பெருமாள் சிம்ம வாகனத்திலும் திருப்பரங்குன்றம் திரும்பினர். உலகம் போற்றும் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 2ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. பெற்றோரின் திருமணத்தில் பங்கேற்க முருகப்பெருமான் தெய்வானை அம்மனும், தாரை வார்த்துக்கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றத்திலிருந்து மே1ம் தேதி புறப்பாடாகினர். மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்ற சுப்பிரமணியசுவாமி தெய்வானை அம்மன் ஆகியோர் கடந்த 3 நாட்களாக திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 4ம் தேதி முருகப்பெருமான்- தெய்வானை அம்மன், மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் விடைபெறுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து 5ம் தேதி காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிருந்து சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை அம்மன் புறப்பாடாகி தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். மாலையில் பல்வேறு அபிஷேகங்கள் முடிந்து பல்லக்கில் ஆவணி மூல வீதிகளில் வலம் சென்று அம்மன் சன்னதி முன்பு எழுந்தருளினர். கோவிலுக்குள் எழுந்தருளியிருந்த பவளக்கனிவாய் பெருமாள் புறப்பாடாகி 3 சுவாமிகளும் திருப்பரங்குன்றம் வந்து சேர்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்