முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் வைகாசிமாத பூஜையைமுன்னிட்டு இன்றுநடைதிறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், மே.- 14 - சபரி மலை ஐயப்பன் கோயிலில் வைகாசி மாத பூஜையை முன்னிட்டு இன்று நடை திறக்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணியளவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரறு மகேஸ்வரரு முன்னிலையில் மேல் சாந்தி பாலமுரளி நம்பூதிரி கோவில் திருநடையை திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து தீபாராதனைகள் நடக்கிறது. வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. 15ம் தேதி முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், கலச பூஜை, உச்ச பூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை உட்பட்ட பல பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். தொடர்ந்து 19ம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் பாடி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்