முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

28 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மீராகுமார்

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மே. 25 - மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மீராகுமார், 35 மாதங்களில் 28 நாடுகளுக்கு பயணம் செய்து வந்துள்ளார். இத்தகவல் உரிமை பெறும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. மக்களவை சபாநாயகர் மீராகுமார் தலைமையில் வெளிநாடுகளுக்கு சென்று வந்ததில் இதுவரை ரூ. 10 கோடிக்கு அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தகவல்களை திரட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர் சுபாஷ் அகர்வால். இவர் திரட்டிய சமீபத்திய தகவலில் மீராகுமாரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.
தமது பதவிக்காலத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரை ஏராளமான நாடுகளுக்கு மீராகுமார் அழைத்து சென்றுள்ளார். அவர் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு மட்டும் பலமுறை சென்று வந்துள்ளார். இதே போல் பிரிட்டன், இலங்கை, அகிலாப்மேன் தீவுகள், சுவாசிலாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகளுக்கு மீராகுமார் பயணம் சென்றுள்ளார். நாடாளுமன்ற நடவடிக்கைகளை கண்டு வருவதற்காக இவர் இந்த பயணத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற குழுக்களுக்கு தலைமை தாங்கியபடி இவர் அதிகம் சென்ற நாடுகள் இத்தாலி, ஆஸ்திரேலியா, மொரீசியஸ், சுவீடன், பூடான், வியட்நாம், கொரிய குடியரசு, ஜப்பான், உருகுவே ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்