முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைவளர நடிகர் கமலஹாசன் யோசனை

திங்கட்கிழமை, 28 மே 2012      சினிமா
Image Unavailable

சென்னை, மே. -27 - திறமையான கலைஞர்களை ஊக்குவித்து அவர்களை நம்பி செலவு செய்தால் கலை வளரும் என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்தார்.  பிரபல ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர் சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆர்ட் ஹவுஸ் என்ற பெயரில் புகைப்படங்களின் களஞ்சியமாக விளங்கும் இந்த கலைக்கூடத்தை நடிகர் கமலஹாசன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,  இன்றைய கலைத்துறை வெவ்வேறு வடிவில் பரிணாம வளர்ச்சி பெற்று முன்னேறி வருகிறது. அதன் ஒரு வடிவம்தான் இந்த ஆர்ட் ஹவுஸ். இது போன்ற முயற்சிகளால் கலைத்துறை மேலும் நவீனமயமாக திகழும். டிஜிட்டல் ஆதிக்கம் மோலோங்கி கொண்டிருக்கிறது. காலத்துக்கு ஏற்பவும், மாற்றங்களுக்கு ஏற்பவும் கலை வடிவத்தை நவீனமாக்கும் கடமை கலைஞனுக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட கலைஞர்களை ஊக்குவித்து அவர்களை நம்பி தாராளமாக செலவு செய்தால் கலை வளரும். ஓவியர் ஸ்ரீதர் என்னுடைய சகோதரர் போன்றவர். அவர் என்னை பல விதங்களில் வரைந்த படங்கள் என்னுடைய அலுவலகத்தில் அலங்கரித்து கொண்டிருக்கின்றன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்