முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேயர் தலைமையில் மதுரை அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 30 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மே.30 - பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து மதுரையில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கினங்க பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவிற்கு பல மடங்கு உயர்த்திய மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து மதுரையில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மதுரை மீனாட்சிபஜார் ஸ்காட் ரோட்டில் நடந்த இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா தலைமை வகித்தார். மதுரை வடக்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ், துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை நகரில் உள்ள அனைத்து வார்டுகளில் இருந்தும் ஏராளமான அதிமுகவினர் திரண்டு வந்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட மேடையில் மத்திய அரசை கண்டித்தும் பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா எழுப்பினார். அவரது கண்டன கோஷங்களை அதிமுகவினரும் திரும்ப சொல்லி மத்தியஅரசுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். பல்வேறு வார்டு பகுதியில் இருந்தும் அதிமுகவினர் ஆட்டோக்களையும், இருசக்கர வாகனங்களையும் மாட்டு வண்டிகளில் ஏற்றி அதில் சவாரி செய்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து கலந்து கொண்டனர். மேலும் சிலர் குதிரை வண்டிகளில் பயணம் செய்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.ஏராளமான அதிமுக தொண்டர்கள் சைக்கிள்களில் வந்து கலந்து கொண்டனர்.

   இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்பிக்கள் எஸ்.டி.கே.ஜக்கையன், எஸ்.முத்துமணி, எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், விவசாய பிரிவு மாநில இணை செயலாளர் ஆர்.சீத்தாராமன், முன்னாள் எம்எல்ஏக்கள் வி.ஆர்.ராஜாங்கம், வளர்மதி ஜெபராஜ், மாவட்ட அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி, துணை செயலாளர் சி.தங்கம், பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மண்டல தலைவர்கள் பெ.சாலைமுத்து, மு.இராஜபாண்டியன், கே.ஜெயவேல், கே.ராஜபாண்டியன், மதுரை வடக்கு சட்டமன்றதொகுதி இணை செயலாளர் ஏ.பி.பாலசுப்பிரமணி, மதுரை மேற்கு 2ம் பகுதிகழக இணை செயலாளர் ஐ.பி.எஸ்.பாலமுருகன், அணி செயலாளர்கள் எஸ்.டி.ஜெயபலன், கா.டேவிட்அண்ணாதுரை, ஷராஜலிங்கம், பெ.இந்திராணி, தமிழ்செல்வன், ஏ.ராஜீவ்காந்தி, பாரி தமிழ்க்குடிமகன், டி.வினோத்குமார், என்.ஜமால்மைதீன், வில்லாபுரம் விஜயகுமார், பகுதி கழக செயலாளர்கள் தளபதி ஆர்.மாரியப்பன், வி.கே.எஸ்.மாரிச்சாமி, எம்.என்.முருகன், பேராசிரியர் ஜெயபால், பி.எஸ்.கண்ணன், பூமிபாலகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாநகர் முனியசாமி, வி.எஸ்.முத்துராமலிங்கம், சண்முகவள்ளி, எல்லீஸ்நகர் ஏ.இந்திரா, தொகுதி கழக செயலாளர்கள் எஸ்.முருகேசன், எஸ்.குமார், மத்திய பகுதி பேரவை செயலாளர் திடீர்நகர் பால்பாண்டி, பிஆர்சி.கர்ணன், அண்ணா கட்டிட தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, எஸ்.தர்மராஜ், சேதுராமலிங்கம், கவுன்சிலர்கள் மேலமடை ஏ.ஜெயக்குமார், புதூர் ஐ.அபுதாகீர், கண்ணகி பாஸ்கரன், சுகந்திஅசோக், வீரணன், நூர்முகமது, விஜி என்ற விஜயராகவன்,பி.குமார், ஜெயராமன், எஸ்.எஸ்.சரவணன், எம்.கேசவபாண்டியம்மாள்,கார்னர் பாஸ்கரன், குமுதா, ஜெயலட்சுமி, ஆர்.லட்சுமி, டி.முருகேஸ்வரி, ராணி போஸ், பாண்டியம்மாள், கலாவதி தேவதாஸ், சுசீந்திரன் மற்றும் எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வி.கே.சாமி, வாட்டர் போர்டு பாண்டி, ராதாகிருஷ்ணன், எம்ஆர்ஜி.பிரபாகரன், வட்ட செயலாளர்கள் ஏ.காஜா, பஜார் துரைப்பாண்டி, எஸ்.போஸ், ஏ.முத்துச்சாமி, புதூர் கே.எம்.கண்ணன், மானகிரி மூர்த்தி, கே.வி.கே.கண்ணன், ஏ.ராஜாமுகமது, ஆறுமுகம், ராமன், வழக்கறிஞர்கள் கோவிந்தன், ரமேஷ், சேகர், இளமன், அசோகன், ஜெயராமன் மற்றும் நிலையூர் முருகன், மகளிரணி தெய்வம் கணபதி, நாகம்மாள், தேனம்மாள், கல்யாணி, பி.புஷ்பா,கவுசல்யா, எல்டா பாஸ்டின்,சுகுணா,புதூர் பாப்பா, அன்னம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்