முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி அமைச்சகத்தில் திடீர் தீ விபத்து: கோப்புகள் நாசம்

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 8 - மத்திய நிதியமைச்சகத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் முக்கிய கோப்புகள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்துக்கு சதி ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லி நார்த் ப்ளாக் அலுவலகத்தில் நிதி அமைச்சகத்தின் 14 மற்றும்15 ஆகிய அறைகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தரப்பட்டது. நான்கு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக நிதி அமைச்சகம் சென்று சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் இரண்டு அறைகளிலும் இருந்த ஏராளமான கோப்புகள், கணிணிகள் மற்றும் ஏ.சி. கள் ஆகியவை எரிந்து நாசமாகி விட்டன.  இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. நாட்டின் நிதி அமைச்சகத்தில் முக்கிய கோப்புகள் உள்ள இடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டிருப்பதால் சதி ஏதும் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்