முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா ஹசாரே திடீர் பல்டி பிரதமருக்கு நற்சான்றிதழ்

சனிக்கிழமை, 9 ஜூன் 2012      ஊழல்
Image Unavailable

 

தானே,ஜூன்.- 9 - பிரதமர் மன்மோகன் சிங் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்திய அண்ணா ஹசாரே திடீரென்று பல்டி அடித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நற்சான்றிதழை வழங்கியுள்ளார்.  பிரதமர் மன்மோகன் சிங் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை அண்ணா ஹசாரே சுமத்தினார். இதற்கு சோனியா காந்தி கடுமையாக எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தார். அதனால் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை திரட்டி சோனியா காந்தியிடம் அண்ணா ஹசார குழுவினர் வழங்கினர்.  புனே நகரில் நடைபெற்ற ஒரு பேரணியி ல் அண்ணா ஹசாரே கலந்துகொண்டு பேசினார். அப்போது ஹசாரே திடீரென்று பல்டி அடித்து பேசினார். பிரதமர் மீது குறை கூறுவதை குறைத்துக்கொண்டார். அதேசமயத்தில் சோனியா காந்தியை மறைமுகமாக தாக்கி பேசினார். மன்மோகன் சிங் கண்ணியமானவர். அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான நேரடி ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறார். சில முடிவுகளை எடுப்பதில் ரிமோட் கண்ட்ரோல் இருக்கிறது. அவரை சுற்றி இருப்பவர்கள் மீது சந்தேகம் எழுகிறது என்று அண்ணா ஹசாரே கூறினார்.  கடந்த பல தினங்களுக்கு முன்பு பேசிய ஹசாரே, பிரதமர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அவரது அமைச்சக சகாக்கள் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. நிலக்கரி ஒதுக்கீடு செய்ததில் நடந்த ஊழலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று ஹசாரே குற்றஞ்சாட்டி இருந்தார். பல தினங்கள் கழித்து பிரதமருக்கு நற்சான்றிதழ் வழங்கி உள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்