முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனார்த்தன ரெட்டியின் காவல் ஆகஸ்ட் வரை நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

பெங்களூர், ஜூலை. - 4 - சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் மாதம் 4 ம் தேதி வரை நீட்டித்து சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சுரங்க முறைகேடு வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியை சி.பி.ஐ. போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தனர். பின்னர் அவரது மனைவி அருணா லட்சுமி உள்ளிட்ட 4 பேரையும் சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இதில் அருணா லட்சுமிக்கு ஜாமீன் கிடைத்தது. ஜனார்த்தன ரெட்டி உள்ளிட்ட 4 பேர் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகின்றனர். இவர்கள் மீதான வழக்கு சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி அங்கடி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜனார்த்தன ரெட்டி உள்ளிட்ட 4 பேருக்கும் ஆகஸ்ட் 4 ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். ஜனார்த்தன ரெட்டியின் மனைவி அருணா லட்சுமி ஆஜராகாததை அடுத்து அவர் ஜூலை 10 ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு நீதிமன்ற சம்மன் அனுப்பி உள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்