முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அர்ஜூனா விருது பெற எனக்கு தகுதி உண்டு: யுவராஜ்சிங்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.10 - நாட்டின் உயரிய விருதான அர்ஜூனா விருது பெற பி.சி.சி.ஐ மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ள யுவராஜ் சிங், தான் அந்த விருதை பெற தகுதியுள்ள நபராக கருதுவதாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். கடந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி, தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதன்பிறகு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். தற்போது குணமடைந்துள்ள யுவராஜ் சிங் அவ்வப்போது பயிற்சியில் ்ஈடுபட்டு வருகிறார். 

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின்(பி.சி.சி.ஐ) மூலம் நாட்டின் உயரிய விருதான அர்ஜூனா விருது பெறுவதற்காக யுவராஜ் சிங்கின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், 

நாட்டின் உயரிய விருதான அர்ஜூனா விருது பெற எனது பெயரை பி.சி.சி.ஐ பரிந்துரைத்து என்னை கவுரவப்படுத்தி உள்ளது. அர்ஜூனா விருது பெற 2 வது முறையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த முறை அந்த விருதை பெற நான் தகுதி உள்ள நபராக இருப்பதாக கருதுகிறேன் என்றார். முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜாகிர் கான், கெளதம் கம்பிர், ஹர்பஜன் சிங், ஷேவாக் ஆகியோர் அர்ஜூனா விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்