முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் குண்டு வெடித்து 12 ஷியா முஸ்லீம்கள் பலி

வியாழக்கிழமை, 19 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், ஜூலை.- 19 - பாகிஸ்தானில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து மினிபஸ்சில் பயணித்த 12 ஷியா முஸ்லீம்கள் பரிதாபமாக பலியானார்கள். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில்  உள்ள கோஹாட் என்ற இடத்திற்கு  ஸ்பாய் என்ற கிராமத்தில் இருந்து சில ஷியா முஸ்லீம்கள் ஒரு மினி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ஒரு சக்திவாய்ந்த  குண்டு வெடித்தது. இதில் அந்த மினி பஸ் சிதறியது. அந்த பஸ்சில் பயணித்த ஷியா முஸ்லீம்களில் 12 பேர் உடல் சிதறி பலியானர்கள்.  மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.  படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் சன்னி முஸ்லீம் மக்கள்தான் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இருந்தாலும் மைனாரிட்டி ஷியா பிரிவு முஸ்லீம்களும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்குள் அடிக்கடி இன மோதல்கள் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு சன்னி முஸ்லீம்  தீவிரவாத அமைப்பை  சேர்ந்தவர்கள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.  இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்