முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலம் சாரல் விழா: அமைச்சர் - சரத்குமார் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2012      சினிமா
Image Unavailable

 

தென்காசி,ஆக.10 - குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடக்க விழாவில் அமைச்சர் செந்தூர்பாண்டியன், எம்.எல்.ஏ. சரத்குமார் கலந்து கொண்டனர். குற்றாலத்தில் சாரல் திருவிழாவின் துவக்க விழா நேற்று மாலை நடந்தது. கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். ஆர்.டி.ஓ.ராஜகிருபாகரன் வரவேற்றார். 

விழாவை துவக்கி வைத்து அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேசியதாவது:- குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவுபடி உரிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் வழிப்பறி அதிகமாக இருந்தது. ஆனால் அதிமுக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் தப்ப முடியாது. அது அமைச்சராக இருந்தாலும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருந்தாலும் தவறு செய்தால் தப்ப முடியாது. முதல்வர் யாரையும் தவறு செய்ய விடமாட்டார். அந்தளவுக்கு சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் என்றார்.

 தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் பேசுகையில், ாாகுற்றால அருவிகளில் குளித்தால்தான் அதன் அருமைகளையும், பெருமைகளையும் அறிய முடியும். போக்குவரத்தில் உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில் ரிங்ரோடு வசதி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. அருவிப்பகுதிகளை சுத்தமாக வைத்திட அனைவரும் முன்வர வேண்டும்ாா என்றார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் நாராயணன், முத்துசெல்வி, அதிமுக மாவட்ட துணை செயலாளர் வி.பி.மூர்த்தி, மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், குற்றாலம் பேரூராட்சி தலைவி லதாஅசோக்பாண்டியன், தொகுதி செயலாளர்கள் செல்வமோகன்தாஸ்பாண்யன், பொய்கை மாரியப்பன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மாடசாமிபாண்டியன், அம்மா பேரவை செயலாளர் ரஜப்முகமது, ஒன்றிய செயலாளர்கள் செல்லப்பன், சங்கரபாண்டியன், பேரூராட்சி மன்ற தலைவர்கள் இலஞ்சி காத்தவராயன், மேலகரம் வக்கீல் பாலசுப்பிரமணியன், அச்சன்புதூர் டாக்டர் சுசீகரன், யுனிையன் சேர்மன்கள் செல்லம்மாள்பால்ராஜ், முருகையா, குற்றாலம் பேரூராட்சி துணைத்தலைவர் கணே';தாமோதரன், கவுன்சிலர்கள் கவுன்சிலர்கள் 'டலா ஜெயசங்கர், சேகர், ஆனந்தி சுரே';, அமுல்ராஜ், நிர்வாக அதிகாரி ராஜையா, அசோக்பாண்டியன், இலஞ்சி கவுன்சிலர் மூக்கையா, இலஞ்சி மாரியப்பன், மயில்வேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்