முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தொண்டர் விபத்தில் மரணம் ஜெயலலிதா இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 14 - விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அ.தி.மு.க. தொண்டர் வி.மணிகண்டன் சாலை விபத்தில் அகால மரணமடைந்ததற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவரும், தாயில்பட்டி கிளை கழக செயலாளருமான வி.மணிகண்டன் வாகன விபத்தில் அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனத்துயரம் அடைந்தேன். என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன் பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். அன்புச் சகோதரர் மணிகண்டனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்