முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவணி மாதப் பிறப்பையொட்டி ஐயப்பன் கோவில் நடைதிறப்பு

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சபரிமலை, ஆக. - 18 - மலையாள புத்தாண்டான ஆவணி மாதப் பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. அத்துடன் இந்த ஆண்டுக்கு சபரிமலை ஐயப்பன்கோயிலின் புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவரு பொறுப்பேற்றார். கேரளத்தில் ஆவணி(சிம்மம்) மாதப் பிறப்பானது மலையாள புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதப் பிறப்பையொட்டி சபரிமலை கோயில் நடையை மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி திறந்து நெய் விளக்கேற்றி வைத்தார். இதையொட்டி புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவரு பொறுப்பேற்றார். ஏற்கனவே தந்திரியாக இருந்த கண்டரரு மகேஸ்வரரு கடந்த ஆடி நிறைபுத்தரி பூஜையுடன் தனது பணியை நிறைவு செய்தார். இந்நிலையில் சோபன மண்டபத்தில் மஹாகணபதி ஹோமம் நடத்தி மலையாள புத்தாண்டில் சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபாடுகள் மற்றும் அபிஷேகங்களை புதிய தந்திரி கண்டரரு ராஜீவரு நடத்துகிறார். இனி அடுத்து வரும் ஓராண்டுக்கு இவரே சபரிமலை கோயிலின் தந்திரியாக இருப்பார். வரும் 21 ம் தேதி வரை சபரிமலை ஐயப்பனுக்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்படும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்