முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சாலைபாதுகாப்பு கருத்தரங்கு இன்று நடைபெறுகிறது

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஆக.- 18 - மதுரை மாநகரிலுள்ள ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு  இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை மதுரை காமராஜர் சாலையிலுள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் (மெப்கோ கலையரங்கம்) நடைபெறவுள்ளது . இக்கருத்தரங்கில் தியானம், யோகா, முதலுதவி தொடர்பான செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்படவுள்ளது.  டிரைவிங் நீட்ஸ் அகாடமி சார்பில் விபத்து ஏன் எப்படி நடக்கிறது என்பது பற்றியும், விபத்தில்லாமல் வாகனம் ஓட்டுவது எப்படி என்பது பற்றியும், ஒலி மற்றும் ஒளி மூலமாக தெளிவான முறையில் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.  இக்கருத்தரங்கில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அன்சுல்மிஸ்ரா,இ.ஆ.ப., காவல் துறை உயர் அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்களும் சிறப்புரை ஆற்ற உள்ளனர். எனவே, மதுரை மாநகரிலுள்ள அனைத்து ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் தவறாது இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அன்சுல்மிஸ்ரா  கேட்டுக் கொள்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்