எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐதராபாத், ஆக. 24 - நியூசிலாந்திற்கு எதிராக ஐதராபாத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்னை எடுத்து இருக்கிறது. இந்திய அணியின் இன்னிங்சில் தேஜேஸ்வர் பூஜாரா சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். இது அவருக்கு டெஸ்டில் முதலாவது சதமாகும்.
தவிர, அவர் இதுவரை 4 டெஸ்டில் பங்கேற்று இருக்கிறார். இதில் ஒரு அரை சதமும், ஒரு சதமும் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சதம் அடித்த அவர் இறுதிவரை ஆட்ட ம் இழக்காமல் இருக்கிறார். அவருக்குப் பக்கபலமாக சேவாக், காம்பீர் , கோக்லி மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் ஆடினர். கோக்லி அரை சதம் அடித்தார்.
கேப்டன் ரோஸ் டெய்லர் தலைமையி லான நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக ஆடி வருகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மையத்தில் நேற்று துவங்கியது. இதில் இந்திய அணி டாசில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த டெஸ்டில் இந்திய அணி ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ் . லக்ஷ்மண் ஆகிய மூத்த வீரர்கள் இல்லாமல் களம் இறங்கியது.எனவே இந்திய அணி எப்படி சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. ஆனால் பூஜாரா மற்றும் கோக்லி இருவரது ஆட்டத்தால் இந்திய அணி கெளரவமான நிலைக்கு சென்று உள்ளது.
முன்னதாக சேவாக் மற்றும் காம்பீர் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். இருவரும் இந்திய அணிக்கு நல்ல துவக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டிற்கு 49 ரன் சேர்த்தனர். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை சிறிது சிறிதாக உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 49 -க்கு சென்ற போது, காம்பீர் ஆட்டம் இழந்தார்.
அவர் 36 பந்தில் 22 ரன்னை எடுத்த நிலையில், போல்ட் வீசிய பந்தில் கீப்பர் வான்விக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 4 பவுண்டரி அடித்தார். இதனைத் தொடர்ந்து பூஜாரா களம் இறங்கினார். அவர் மே.இ.தீவுக்கு எதிரான தொடரின் போது , சிறப்பாக ஆடியதால் இந்த டெஸ்டில் அவர் 3-வது வீரராக களம் இறக்கப்பட்டார்.
பூஜாரா அபாரமாக பேட்டிங் செய்து அனைவரது எதிர்பார்ப்பையும் நிறைவேற்றினார். டிராவிட் இல்லாத குறையை அவர் பூர்த்தி செய்து வருகிறார். பூஜாராவும், சேவாக்கும் இணைந்து கவனமாகவும், நிதானமாகவும் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்திய அணி 10.4 ஓவரில் 50 ரன்னை எட்டியது. நன்றாக பேட்டிங் செய்து கொண்டு இருந்த சேவாக் 50 ரன்னை நெருங்கினார். ஆனால் அவரால் அரை சதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை.
சேவாக் 41 பந்தில் 47 ரன்னை எடுத்த நிலையில், பிரேஸ்வெல் வீசிய பந்தை அடித்த போது, அது கேட்சாக மாறி செகன்ட் ஸ்லிப்பில் இருந்த குப்டிலிடம் சிக்கியது .
அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 77 ரன்னிற்கு 2 விக்கெட் இழப்பு என்ற நிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து மாஸ்டர் பேட்ஸ்மேன் டெண்டுல்கர் களம் இறங்கினார். மதிய உணவு இடைவேளையின் போ
து, இந்திய அணியின் ஸ்கோர் 25 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன் என்ற நிலையில் இருந்தது. பின்னர் தொடர்ந்து ஆடிய இந்தியா 25.3 ஓவரில் 100 ரன்னை எட்டியது. ஆனால் மாஸ்டர் பேட்ஸ்மேன் டெண்டுல்கரும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. சச்சின் 62 பந்தில் 19 ரன் எடுத்த நிலையில் போல்ட் வீசிய பந்தில் கிளீன் போல்ட்டானார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 125 என்ற நிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து விராட் கோக்லி வந்தார். ஒருமுனையில் பூஜாரா நிலைத்து ஆடினார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை நன்கு உயர்த்தினர். இந்தியாவின் ஸ்கோர் 250 -க்கு சென்ற போது, கோக்லி ஆட்டம் இழந்தார். அவர் 107 பந்தில் 58 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். பின்பு களம் இறங்கிய ரெய்னாவும் அதிக நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. அவர் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் தோனி வந்தார்.
இந்த ஜோடி கடைசி வரை நிலைத்து நின்றது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 87 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது பூஜாரா 226 பந்தில் 119 ரன்னுடனும் (15 பவுண்டரி, 1 சிக்சர்)தோனி 37 பந்தில் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பூஜாரா 119 பந்தில் 50 ரன்னையும், 169 பந்தில் 100 ரன்னையும் எட்டினார்.
முன்னதாக காம்பீர் மற்றும் சேவாக் இருவரும் நன்கு ஆடிக் கொண்டிருந்த போதிலும், தேவையில்லாத பந்துகளை தொட்டு ஆட்டம் இழந்தனர். அதே போல டெண்டுல்கர் மற்றும் ரெய்னாவும் அவுட்டானார்கள்.
நியூசிலாந்து அணி தரப்பில்,போல்ட் 63 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, மார்டின், பிரேஸ்வெல் மற்றும் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் 92,640-க்கும் விற்பனை
13 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
-
மருதம் திரை விமர்சனம்
13 Oct 2025ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் விதார்த், மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதா
-
தேசிய தலைவர் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி
13 Oct 2025எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-10-2025.
13 Oct 2025 -
வில் (உயில்) திரை விமர்சனம்
13 Oct 2025தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு ஒரு வீட்டை அலக்கியா பெயரில் எழுதி வைத்து விட்டு பின் இறந்து விடுகிறார்.
-
தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
13 Oct 2025அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன்.
-
இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி
13 Oct 2025அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்
13 Oct 2025சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்
-
ஆய்வு செய்யாமல் உத்தரவிடுவதா..? கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஐகோர்ட் நீதிபதிக்கு கண்டனம்
13 Oct 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : இன்று 4 மாவட்டங்களில் கனமழை
13 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று கோவை, நீ
-
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Oct 2025சென்னை, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள்; ரூ.190 கோடியில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.190 கோடி செலவில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்ற
-
எடுத்துக்காட்டான காந்திய வாழ்வு: நூற்றாண்டு காணும் லட்சுமி காந்தனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
13 Oct 2025சென்னை, லட்சுமி காந்தன் பாரதியின் வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய, முடிவுற்ற பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.92 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
மதுரவாயலில் 1,600 பேருக்கு புதிய வீட்டுமனை பட்டாக்கள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
13 Oct 2025சென்னை, சென்னை, மதுரவாயில் பகுதியில் 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு : ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் குழு அமைப்பு
13 Oct 2025புதுடெல்லி : கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம்
13 Oct 2025டெல் அவிவ், உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
-
எங்கள் நிறுவனருக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி
13 Oct 2025கடந்த வருடம் இதேநாளில் (அக்.14-ல்) கோவில்பட்டி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த தினபூமி நாளிதழ் நிறுவனரும், தொழிலதிபருமான திரு.கே.ஏ.எஸ்.மணிமாறன் அவர்களுக்கு தினபூமி நாளி
-
பா.ஜ.க. நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய் - ரவிக்குமார் எம்.பி
13 Oct 2025சென்னை : பா.ஜ.க. நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய் என்று ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
13 Oct 2025ராமேசுவரம் : இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவர மீனவர்கள் 3-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
-
இந்தோனேஷிய பெண்ணை கரம்பிடித்த தமிழக வாலிபர்
13 Oct 2025திருவாரூர் : இந்தோனேஷிய பெண்ணை திருவாரூர் வாலிபர் கரம்பிடித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
-
ரிசர்வ் வங்கியின் புதிய காசோலை முறைக்கு உடனடி தீர்வு முறை : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
13 Oct 2025சென்னை : ரிசர்வ் வங்கிக்கு காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.
-
கரூர் துயர சம்பவம்: த.வெ.க. தலைமை அலுவலகத்தில் 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர்
13 Oct 2025சென்னை : கரூர் சம்பவம்; த.வெ.க. தலைமை அலுவலகம் வெளியே 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர் ஒட்டப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டது.
-
இஸ்ரேலில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
13 Oct 2025ஜெருசலேம் : காசா அமைதி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
தென்ஆப்பிரிக்காவில் சோகம்: பேருந்து விபத்தில் 42 பேர் பலி
13 Oct 2025ஜோகன்னஸ்பர்க் : தென்ஆப்பிரிக்காவில் பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.