முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப்-2: பாலனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

ஈரோடு.ஆக,25- குரூப் -2 கேள்வி தாள் வெளியான விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான பாலன் என்கிற ஸ்ரீதர்ராஜை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நிதிபதி அனுமதி அளித்துள்ளர் . டி.என்.பி.சி குரூப்-2 கேள்விதாள்  வெளியான விவகாரத்தில்  முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பாலன் என்கிற ஸ்ரீதர் ராஜூ கடந்த வியாழன் அன்று கோவை 3- வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில்  மாஜிஸ்திரேட் ரமேஷ் பாபு முன்பு சரணடைந்தார்.  அவரை கோவை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்திரவிட்டார்.தொடர்ந்து நேற்று  ஈரோடு 2 வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பாலனை போலீசார் ஆஜர் படுத்தினர்.இங்கு வழக்கை விசாரித்த நிதிபதி ராஜ  மாணிக்கம் பாலன் என்கிற ஸ்ரீதர்ராஜனை  7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.பாலனிடம் போலீசார் விசாரணை நடத்தும் போது குரூப்-2 கேள்விதாள் வெளியான விவகாரத்தில் உள்ள நெட்வொர்க் முழுமையாக பிடிபடும் என கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்