எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,ஏப்.- 7 - நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. எம்.பியுமான கனிமொழி மீது வரும் 25 ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ.பி.கோ. 120 பி பிரிவின் கீழ் கிரிமினல் சதித் திட்டம் தீட்டியதாக மத்திய புலனாய்வுத் துறை கனிமொழி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2009 - 10 ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சிக்கு டி.பி. ரியாலிட்டியின் துணை நிறுவனம் மூலமாக ரூ 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
கலைஞர் டி.விக்கு கைமாறிய ரூ 214 கோடி முதலில் குசேகான் ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து சினி யுக் பிலிம்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு கைமாறியதாம். அதன் பிறகுதான் கலைஞர் டி.விக்கு கைமாறி உள்ளது. முன்னதாக, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கூறுகையில்,
மத்திய புலனாய்வுத் துறையும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியதாக தெரிவித்தார். இந்த தொகை கலைஞர் டி.விக்கு டி.பி. ரியாலிட்டி மூலம் கடனாக கொடுக்கப்பட்டதா? அல்லது அலைவரிசைக்காக லஞ்சமாக கொடுக்கப்பட்டதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டதாக வேணுகோபால் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். கலைஞர் டி.விக்கு ரூ 214 கோடி கைமாறிய விவகாரம் அம்பலத்துக்கு வந்தவுடனேயே அவர்கள் சாக்குப்போக்கு சொன்னார்கள். அதாவது, இந்த தொகை கடனாக பெறப்பட்டதாகவும், பின்னர் திருப்பிக் கொடுக்கப்பட்டதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் மிக தாமதமாகத்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று வேணுகோபால் சுட்டிக் காட்டினார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்த நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ராசா தற்போது திஹார் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். கடந்த 2 ம் தேதி அவர் மீதும் மற்றும் 8 பேர் மீதும் சி.பி.ஐ. தனது முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. கிட்டத்தட்ட 80 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ. அன்றைக்கு தாக்கல் செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. அநேகமாக இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கை வரும் 25 ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து 2 வாரங்களுக்கு பிறகு இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். அந்த குற்றப்பத்திரிக்கையில் கனிமொழியின் பெயரும், கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.
கனிமொழிக்கு நெருக்கமானவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இருந்தாலும் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளின் பெயர் இந்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறாது என்றே தெரிகிறது. மத்திய புலனாய்வு துறை அதை தவிர்த்து விடும் என்றே டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காரணம், கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட விவகாரங்களில் தயாளு அம்மாளுக்கு தீவிர பங்கு இல்லை என்று புலனாய்வு துறை கருதுவதால் அவரது பெயரை குற்றப்பத்திரிக்கையில் சி.பி.ஐ. சேர்க்காது என்றே அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ 214 கோடி கைமாறிய விவகாரத்தில் கனிமொழியும், சரத்குமாரும்தான் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள். இவர்கள் இருவருக்கும் அந்த தொலைக்காட்சியில் 20 சதவீத பங்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரம் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் உள்ளதாம். ஆனாலும் அவரது பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறாது என்றே தெரிகிறது. கனிமொழி மீது குற்றப்பத்திரிக்கை வெகு விரைவில் தாக்கல் செய்யப்படவிருப்பதால் கருணாநிதியின் குடும்பம் தற்போது கலக்கத்தில் இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடந்து வரும் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரமே இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல்தான். மேடைகளில் பேசும் அனைத்து தலைவர்களுமே ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவை பற்றித்தான் மூலைக்கு மூலை பேசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.