முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறார்கள்: விஜயகாந்த்

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருவாடானை,ஏப் - .7 - தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறார்கள் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திருவாடானையில் பேசினார்.  ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானை ஆதரித்து விஜயகாந்த் தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ். மங்கலம், சனவெளி, திருவாடானை ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த முறை திருவாடானைக்கு நான் வந்த போது ஊர் எப்படி இருந்ததோ அதே போலத்தான் இப்போதும் இருக்கிறது. எந்தவித மாற்றமும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக கருணாநிதி அரசு மக்களுக்கு எவ்வித பயன்களையும் செய்து கொடுக்கவில்லை. விலைவாசி உயர்வு, மீனவர் பிரச்சினை என எல்லா பிரச்சினைகளும் தலைதூக்கி உள்ளன. 5 முறை முதல்வராக இருந்தவருக்கு இன்னும் பதவி வெறி அடங்கவில்லை. தி.மு.கவினர் பணபலத்தையே நம்பியுள்ளார்கள். நான் மக்கள் பலத்தை நம்பி நிற்கிறேன். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் கேபிள் டி.வி. அரசுடமையாக்கப்படும். இந்தியாவில் பல சிறந்த மருத்துவர்கள் உள்ள நிலையில் ஸ்டாலின் வைத்தியத்திற்காக லண்டன் செல்கிறார். திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி போனவருக்கு திருட்டு புத்திதான் வரும். ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசா சிறையில் இருந்து வெளியில் வந்தால் கொன்று விடுவார்கள் என பயந்து ஜாமீனில் வராமல் சிறையிலேயே உள்ளார். தமிழக மக்கள் தற்போது ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறார்கள். எனவே இந்த தொகுதி மக்கள் அனைவரும் முஜிபுர் ரஹ்மானுக்கு வாக்களிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தின் போது தே.மு.தி.க. நிர்வாகிகள் செங்கை ஜின்னா, அழகு பாலகிருஷ்ணன், கருப்பசாமி, மணிமாறன், ரோஜா முருகவேல், பூமணி மணி மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்