எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, செப். 21 - டீசல் விலை உயர்வு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயக கூட்டணி, இடதுசாரி கட்சிகள் மற்றும் சமாஜ்வாடி கட்சி ஆகிய கட்சிகள் நடத்திய பாரத் பந்த்தால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி, இடதுசாரி கட்சிகள் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகளின் ஆதரவோடு நேற்று நாடு தழுவிய பாரத் பந்த் நடைபெற்றது. குறிப்பாக டீசல் விலை உயர்வை கண்டித்து இந்த பந்த் நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது தெரிந்ததே. இந்த கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இன்று வெள்ளிக் கிழமை தங்களது பதவிகளை ராஜினாமா செய்கிறார்கள். தனது இந்த முடிவில் மாற்றமில்லை என்று மம்தாவும் திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
இந்த நிலையில்தான் நேற்று நாடு முழுவதும் பாரத் பந்த் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. டெல்லியில் ஷீலாதீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியில் இருந்து வருகிறது. அங்கும் கூட ஏராளமான மார்க்கெட்டுகள் மூடப்பட்டிருந்தன. சில இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறியல் செய்தனர். ஆனாலும் வாகனப் போக்குவரத்து இயல்பாகவே இருந்தது. லட்சுமிநகர், டிபன்ஸ் காலனி, போகல் போன்ற பல பகுதிகளில் கடைகள் திறந்திருந்தன. அதே நேரம் கன்னாட்பிளேஸ், கரோல்பார்க், சந்திரிசவுக் போன்ற இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. புது டெல்லி ரயில் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்கள் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோக்களை இயக்கவில்லை. டெல்லியில் தனியார் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பாரதீய ஜனதா ஆதரவாளர்கள் பல இடங்களில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர்.
உ.பி. மாநிலம்:
உத்தரபிரதேச மாநிலத்தில் பல இடங்களில் சமாஜ்வாடி கட்சி மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி ரயில்களை நிறுத்தினர். மதுரா, ஆக்ரா, வாரணாசி, அலகாபாத், லக்னோ ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில்களை நிறுத்தி போராட்டம் நடத்தினர். ஆக்ரா, குவாலியர் நெடுஞ்சாலையில் டயர்களை கொளுத்தி வர்த்தகர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். உ.பி.யில் பல இடங்களில் முக்கிய மார்க்கெட்டுகள் மூடப்பட்டிருந்தன.
மகராஷ்டிரம்:மகராஷ்டிரம் மாநிலத்தில் இந்த பந்துக்கு ஓரளவே ஆதரவு கிடைத்தது. காரணம் இந்த மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவின் காரணமாக சிவசேனா, மகராஷ்டிர நவநிர்மான் சேனா ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் பந்த்தில் கலந்து கொள்ளவில்லை. பீகார் மாநிலம் பாட்னாவில் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் மற்றும் சி.பி. தாகூர் ஆகியோர் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டனர். மேலும் பல எதிர்க்கட்சி தலைவர்களும் இங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப்:
பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் இந்த பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. நீண்டதூரம் செல்லும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டிருந்தது. இந்த பந்த்தையடுத்து சண்டிகரில் பல தனியார் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்தன. கடைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. பஞ்சாபில் ரயில் சேவை மட்டும் இயல்பாக இருந்தது. விமானங்கள் வழக்கம் போல் இயங்கின. இருந்தாலும் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசின் அழைப்பை ஏற்று லாரிகள் இம்மாநிலத்தில் ஓடவில்லை.
மேற்கு வங்கம்:
இடதுசாரிகள் இங்கு அழைப்பு விடுத்த 12 மணி நேர பந்த்துக்கு ஆதரவு கிடைத்தது. கொல்கத்தாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கிழக்கு ரயில்வே மற்றும் தென் கிழக்கு ரயில்வேயில் ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹவுராவுக்கு செல்லும் ரயில்கள் மற்றும் அங்கிருந்து புறப்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் காலை 8.30 மணி வரை கடும் பாதிப்பு ஏற்பட்டது. பல ரயில் நிலையங்களில் பந்த் ஆதரவாளர்கள் ரயில் தண்டவாளங்களில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இருப்பினும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்படவில்லை. விமானங்களும் வழக்கம் போல் இயங்கின. சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படவில்லை. இருப்பினும் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. கல்வி நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை.
ஒடிசா:ஒடிசாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை இந்த பந்த்தால் பாதிக்கப்பட்டது. ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. அதே போல் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இம்மாநிலத்தில் நடக்கும் ஒரு திருவிழாவும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. புவனேஸ்வரம், கட்டாக் உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் 12 க்கும் மேற்பட்ட ரயில்கள்நிறுத்தப்பட்டன. இந்த பந்த்தையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர். பந்த் அமைதியாக நடந்ததாகவும், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் இந்த பந்த்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்து இருந்தது. மாநிலம் முழுவதும் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. இடதுசாரி யூனியன்களை சேர்ந்த ஆட்டோக்கள் இயங்கவில்லை. மற்றபடி இதர ஆட்டோக்கள் வழக்கம் போல் செயல்பட்டன. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் திறந்திருந்தன. அரசு அலுவலகங்களிலும் பணிகள் நடைபெற்றன. விமான சேவையில் மட்டும் சிறிய பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டில் கிட்டத்தட்ட 3,000 காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டிருந்தன. அனைத்து மாவட்டங்களிலும் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கடைகள் மூடப்பட்டிருந்தன. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை. அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 12 hours ago |
ஆனியன்ப்ரை5 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "