முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமலையில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, அக். 14 - திருமலை திருப்பதியில் நாளை 15 ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்குகிறது. திருமலையில் ஏழுமலையானுக்கு வருடத்திற்கு ஒரு முறை ஒரு பிரம்மோற்சவமும், இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை இரண்டு பிரம்மோற்சவங்களும் நடத்துவது வழக்கம். அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 18 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்தது. இரண்டாவது நவராத்திரி பிரம்மோற்சவம் நாளை 15 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும். 24 ம் தேதி பரிவேட்டை ஏழுமலையான் வேட்டையாடுதல் உற்சவமும் நடைபெறும். இரண்டாவது பிரம்மோற்சவத்தின் போது அங்கு ரார்ப்பணம் முளை விடுதல், கொடியேற்றம் மாற்றம், கொடியிறக்கம், தேரோட்டம் ஆகியவை நடைபெறாது. அதன்படி நாளை 15 ம் தேதி முதல் நாள் இரவு பெரிய சேஷவாகனத்திலும், நாளை மறுதினம் சிறிய சேஷ வாகனத்திலும், 17 ம் தேதி சிம்ம வாகனத்திலும், முத்துப்பந்தல் வாகனத்திலும், 18 ம் தேதி கல்பவிருட்ச வாகனத்திலும், ஸர்வபூடால வாகனத்திலும், 19 ம் தேதி மோகினி அவதாரத்திலும், கருட சேவை நிகழ்ச்சியும், 20 ம் தேதி அனுமந்த வாகனத்திலும், புஷ்பக விமானத்திலும், மாலை யானை வாகனத்திலும், 21 ம் தேதி சூரியபிரபை வாகனத்திலும் சந்திரபிரபை வாகனத்திலும், 22 ம் தேதி தங்கத் தேர் குதிரை வாகனத்திலும், 23 ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், தங்க திருப்பல்லக்கிலும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்