முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட அதிபர்கள் சங்க அலுவலகத்தில் முற்றுகை - மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை,  அக்.28 -​தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.  எஸ்.ஏ. சந்திரசேகரனுக்கு எதிராக அதிருப்தி கோஷ்டியினர் கே.ஆர். தலைமையில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சென்னையில் இன்று போட்டி பொதுக்குழுவையும் இவர்கள் கூட்டுகின்றனர். இதற்கு கோர்ட்டிலும் அனுமதி பெற்றுள்ளனர். நேற்று காலை அதிருப்தி அணியை சேர்ந்த தயாரிப்பாளர்கள்  அண்ணா  மேம்பாலம் அருகில் உள்ள  தயாரிப்பாளர்   சங்க அலுவலகத்தில் திரண்டனர். அங்கு அலுவலக   கதவை எஸ்.ஏ. சந்திரசேகரன்  ட்டி விட்டு சென்று  இருந்தார். கதவை திறக்க வற்புறுத்தி அலுவலக வாயிலில் அவர்கள்  முற்றுகையிட்டனர். 

தயாரிப்பாளர்கள் கே.ஆர்., சத்தியஜோதி தியாகராஜன், கே.ராஜன்,  சீனிவாசன், கலைப்புலி சேகரன், கே.பாலு, ராதாகிருஷ்ணன், அழகன் தமிழ்மணி, டி.சிவா, ஜாகுவார் தங்கம்,  கமிலா நாசர், வடிவேலு, சோழா பொன்னுரங்கம், விஜயன், ராஜா உள்ளிட்ட பலர் இந்த முற்றுகையில்  பங்கேற்றனர். இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்