முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் சேர்ந்தார் என்.டி.ஆரின் மனைவிபார்வதி

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், நவ. - 5 - மறைந்த என்.டி. ராமாராவின் மனைவியான லட்சுமி பார்வதி, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் சேர்ந்துள்ளார். என்.டி. ராமாராவின் மறைவுக்குப் பின்னர் தெலுங்கு தேசம் என்.டி.ஆர் என்ற கட்சியை உருவாக்கி செயல்பட்டு வந்தார் லட்சமி பார்வதி. அரசியலில் அவரால் எந்தத் தாக்கத்தையம் ஏற்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் என்.டி.ஆர் தெலுங்கு தேச கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகி விட்டதாக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். மறைந்த என்.டி. ராமராவின் எண்ணங்களையும் கொள்கைகளையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பின்பற்றி வருவதால் அக்கட்சியில் இணைகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்