முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலைவிபத்தில் உயிரிழந்த அ.தி.மு.க. தொண்டர் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

புதன்கிழமை, 7 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 8 - சாலை விபத்தில் உயிரிழந்த அ.தி.மு.க. தொண்டர் திம்மராஜ் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கிழக்கு ஒன்றியம், பெரியகுதிபாலா கிளைக் கழக செயலாளரும், மேலுமலை ஊராட்சிமன்ற துணைத்தலைவருமான எம்.திம்மராஜ் சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனத் துயரம் அடைந்தேன். என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும் என்று மீண்டும் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அன்புச் சகோதரர் திம்மராஜை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்