முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுக்கு சேவையாற்றவே விரும்புகிறேன்: சிறுமி மலாலா

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், பிப். 6 - தலிபான்களால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலா, தாம் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகக் கூறியுள்ளார். மலாலாவுக்கு தலையில் ஏற்பட்ட காயத்துக்காக 2 அறுவை சிகிச்சைகள் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியாக பேச முடியாத நிலையில் வீடியோ மூலம் அவர் பேசுகையில், இன்று என்னை நீங்கள் உயிருடன் பார்க்க முடிகிறது. நாளுக்கு நாள் நான் நலமடைந்து வருகிறேன். உங்களை எல்லாம் பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் காரணம், குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என உலகமக்கள் அனைவரும் எனக்காக செய்த பிராத்தனை தான். உங்களுடைய பிராத்தனையின் பலனாக கடவுள் எனக்கு புதிய வாழ்க்கையை தந்துள்ளார். 

இது என்னுடைய இரண்டாவது வாழ்க்கை. இந்த வாழ்க்கையின் மூலம் நான் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன். ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு பெண்ணும் கல்வியறவை பெற வேண்டும். இதற்காக மலாலா நிதி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளேன். இந்த அமைப்புக்கு பாகிஸ்தானில் இருந்து மட்டும் ரூ. 53 கோடி நிதி சேர்ந்துள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்