முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சே வரக்கூடாது! திருப்பதி அதிகாரிக்கு மிரட்டல்

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

திருமலை, பிப். 9 - ராஜபக்சே வருகையையொட்டி திருப்பதி கோயில் அதிகாரிக்கு டெலிபோனில் மிரட்டல் வந்துள்ளது. 

இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று காலை திருப்பதி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று திருப்பதி, திருமலை தேவஸ்தான இணை செயல் அலுவலகத்திற்கு டெலிபோன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர், ராஜபக்சே திருப்பதிக்கு வரக் கூடாது. மீறி வந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இது குறித்து இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ திருப்பதி போலீசில் புகார் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி திருப்பதி கோயில் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago