எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.14 - தமிழ்நாட்டில் பொதுவிநியோக திட்டம் சிறப்பாக செயல்படுகிறது, ஆகையினால் உணவு பாதுகாப்பு மசோதாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
உணவு பாதுகாப்பு மசோதா குறித்த மாநில அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மாநாடு டெல்லியில் நேற்று (13.2.13) நடைபெற்றது. மாநாட்டிற்கு மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு சார்பில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், உணவு மற்றும் கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் என்.பி.நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் பேசியதாவது:-
தமிழ்நாடு பொது விநியோக திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உணவு பாதுகாப்பை எந்த விதிவிலக்கு இல்லாமல் உறுதிப்படுத்த முடிகிறது. எங்கள் மாநிலத்தில் பொது விநியோக திட்டம் பொதுமக்களால் பெரிதும் வரவேற்கப்படுவதால், தமிழக முதல்வர் இதை அமல்படுத்த உறுதியாக உள்ளார். தமிழ்நாட்டில் அரிசி மட்டுமின்றி கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்பு பொது விநியோக திட்டமாக பருப்பு, பாமாயில் போன்றவையும் மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. மற்றொரு தமிழகத்தின் சிறப்பு என்னவென்றால், மாநிலத்திலுள்ள நியாய விலை கடைகள் தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கு கழத்தாலும், கூட்டுறவு சங்கங்களாலும் நடத்தப்படுகின்றது. ஒரு சில நியாயவிலை கடைகள் மகளிர் சுயஉதவிக்குழுக்களால் நடத்த அனுமதிக்கப்படுகின்றது. இத்தகைய கடைகளை தனியார் துறை நடத்த அனுமதிக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் ஆண்டு உணவு மானியம் ரூ.4,900 கோடியாகும். வலுவான நிர்வாக பராமரிப்பு, கண்காணிப்பு மற்றும் குறைத்தீர்க்கும் திட்டம் ஆகியவை பொது விநியோக கூட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் பல தலைமுறைகளாக அமல்படுத்தி வரும் பொது விநியோக திட்டத்தை ஒப்பிட்டு காட்டி, தற்போது மத்திய அரசு அமல்படுத்தி வரும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவதிலுள்ள எதார்த்தமான குறைபாடுகளை தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வரின் கருத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். நம்முடைய ``சமஷ்டி அமைப்பில் மாநிலங்கள் நேரடியாக மக்களோடு நெருக்கமான உறவு வைத்துள்ளதால், பிரபலமான நலத்திட்டங்களை தேர்வு செய்திவதிலும், அமல்படுத்திலும் மாநிலங்களுக்கு உரிமைகள் இருக்க வேண்டும்'' இவ்வாறு தமிழக முதல்வர் கூறிய கருத்து நிலைக்குழுவால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. 2012 பிப்.8, 9 தேதிகளில் மாநிலங்களின் உணவு மற்றும் விவசாய அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதல்வரின் கருத்து முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவை இறுதி செய்யும் முன்பு, சில ஆலோசனைகளை முன்வைக்க விரும்புகிறேன்.
தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளதுபோல், உணவு பாதுகாப்பு மசோதா குழப்பம் மற்றும் அரைகுறை தன்மையால் குறைபாடு உள்ளதாக தோன்றுகிறது. உதாரணமாக உத்தேசிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட குழுக்கள் பற்றி வகைபாடு இதை அமல்படுத்துவதில் விளக்கமாக இல்லை. நிலைக்குழுவால் கூறப்பட்டுள்ளதுபோல், வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களின் சமூக பொருளாதார சாதிவாரியான கணக்கெடுப்பு நிறைவு பெறவில்லை. குறிப்பிட்ட செயற் திட்டம் குறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் முடிவு எடுக்கவில்லை என்று நாங்கள் அறிகிறோம். இந்த நடவடிக்கைகள் நிறைவு செய்வதற்கு முன்பு அமல்படுத்தும் காலக்கெடுவை நிர்ணயிக்கக்கூடாது. இந்த வகைப்பாட்டு பிரிவுகள் அறிவியல் ரீதியானதோ, ஒப்புகொள்ளகூடியதோ இல்லை. மத்திய அரசின் இந்த மசோதாவின் பயன்பெறும் மக்கள் தொகையின் சதவிதம் கிராமப்புறத்தில் 75 சதவீதமாகவும், நகர்புறத்தில் 50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதற்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. நகர்புறங்களின் 50 சதவிதம் என்பதை தமிழ்நாட்டை மிகவும் பாதிக்கும். ஏன்என்றால் இங்கு பெரும் பகுதி, நகர்புறமாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய திட்டக்குழு உத்தேசித்துள்ள வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பிரிவுகளும் இந்த மசோதாவின் கூறப்பட்டுள்ள வகைபாடுகளும் நகர்ப்புற ஏழைகளுக்கு உணவு பாதுகாப்பு வழங்குவதை கேலிகூத்து ஆகவிடும். நகர்புறங்களின் 50 சதவிதம் என்பதை கிராமப்புறங்களை போலவே 75 சதவிதமாக்க வேண்டும் என்று நான் ஆலோசனை கூற விரும்புகிறேன்.
இயற்கை பேரிடர்களான வறட்சி, வெள்ளம், நெருக்கடி போன்ற காலங்களில் நலிந்த பிரிவை சேர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை வறுமை கோட்டுக்கு கீழே அதிகரித்து விடுகிறது. பயனாளிகளின் அடையாளம் காண்பது, சலுகை பெற்ற வீடுகள், பொதுவாக உள்ள வீடுகள், பட்டினியால் வாடும் நபர்கள், சிறப்பு குழுக்கள், கைவிடப்பட்ட நபர்கள், வீடற்றவர்கள் ஆகியவர்கள் குறித்து எந்த விளக்கமும் இல்லை. இதனால் பல தவறுகள் ஏற்படும், இவற்றை நடைமுறை பிரச்சனைகளை கொண்டு தீர்க்க வேண்டும்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவதில் மாநில அரசுகளை ஏ பிரிவு, பி பிரிவு, சி பிரிவுகளாக பிரிக்கலாம் என்று ஏற்கனவே பொதுவிநியோக திட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்களை ஏ பிரிவில் சேர்க்கலாம் என்றும் நிலைக்குழு கூறியுள்ளது. பொது விநியோக திட்டத்தில் 50 சதவிதத்தை மத்திய அரசு ஏற்கலாம் என்பது எங்களுடைய கருத்து. சலுகை பிரிவினர் பொது குழுவினர் அனைவருக்கும் மாதம் 5 கிலோ எல்லோருக்கும் வழங்கிடலாம் என்பது நிலைக்குழுவின் கருத்து. தமிழ்நாட்டின் ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு 12 கிலோ தேவைப்படுகிறது. ஆனால் இந்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டத்தின் 5 கிலோ மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்திலுள்ள எண்ணிக்கை அடிப்படையில் ஒரு நபருக்கு மாதத்திற்கு 10 கிலோ வழங்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துகிறோம்.
இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதுபோல், உணவு பாதுகாப்பு திட்டத்தில் நேரடி பணபட்டுவாடாவை நாங்கள் எதிர்க்கிறோம். இதனால் ஏழைகளுக்கு உணவு தானியங்கள் கிடைக்காது, குழந்தைகள் பட்டினி கிடக்க நேரிடும். மேலும், உணவு கூப்பன் முறை எங்கள் மாநிலத்திற்கு ஏற்றது அல்ல. எனவே இந்த யோசனைகளை இந்த மாநிலங்களுக்கு வற்புறுத்தகூடாது. தற்போதுள்ள மாநிலங்களுக்கான உணவு தானிய ஒதுக்கீட்டை உணவு பாதுகாப்பு மசோதா பிரச்சனை ஏற்படுத்தும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் 2.96 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதால் நிலைமாறி மாதந்தோறும் 2.24 லட்சம் மெட்ரிக் டன்தான் ஒதுக்க நேரிடும். தற்போதுள்ள ஒதுக்கீட்டை பாதுகாக்காவிட்டால் தமிழ்நாட்டின் பொது விநியோக திட்டம் பாதுகாப்புக்குள்ளாகும். எனவே தற்போதுள்ள உணவு தானிய திட்டத்தை பாதுகாக்கும் வகையில் தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை திருத்தவேண்டும். நிலைக்குழுவின் சிபாரிசுப்படி மத்திய தொகுப்பில், ஒதுக்கீட்டில் குறைவு ஏற்பட்டால் அதற்கு ஏற்ப நிதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை நாங்கள் ஏற்கொள்ளவதாக இல்லை. இது மேலும் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும். ஏன்என்றால், இதை விலைக்கி பொது சந்தையில் வாங்க முடியாது. எனவே உணவு பற்றாக்குறை ஏற்பட்டால், இறக்குமதி மூலம் அதை சரிசெய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் கடமையாகும்.
ஆகையினால் உணவு பாதுகாப்பு அமைப்பு மசோதாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த வேண்டுகிறேன். தற்போது தமிழ்நாட்டிலுள்ள பொது விநியோக திட்டமுறையை மேலும் சிறப்பாக அமல்படுத்த உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு உணவு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..! வெள்ளி விலை புதிய உச்சம்
24 Dec 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
த.வெ.க. கூட்டணியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு? 38 தொகுதிகளை கேட்டுப்பெறவும் முடிவு
24 Dec 2025சென்னை, த.வெ.க.
-
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கிறிஸ்துவ பெருமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: சிறுபான்மையினருக்கு காவலனாக இருப்போம் என உறுதி
24 Dec 2025சென்னை, இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.
-
விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம்: ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு: செய்து அரசாணை வெளியீடு
24 Dec 2025சென்னை, விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்க ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்தற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
-
தமிழக அரசியல் வரலாற்றின் பொற்காலம்: எம்.ஜி.ஆருக்கு இ.பி.எஸ். புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆரின் நினைவு நாளில், நம் உயிர்நிகர் தலைவரை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயம் என்று புகழஞ்சல
-
விஜய் ஹசாரே கோப்பை: 50 ஓவர்களில் 574 ரன்களை எடுத்து பீகார் அணி சாதனை
24 Dec 2025பாட்னா, விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 50 ஓவர்களில் 574 ரன்கள் எடுத்து பீகார் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
-
ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு: இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டம்
24 Dec 2025சென்னை, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு - இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
-
அன்பு, அமைதி தழைக்க வேண்டும்: கிறிஸ்துவ பெருமக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
24 Dec 2025சென்னை, அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்று இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு அ.தி.மு.க.
-
நாட்டில் புதிதாக மேலும் 3 விமான நிறுவனங்களுக்கு அனுமதி
24 Dec 2025புதுடெல்லி, உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையை மேலும் பலப்படுத்தும் விதமாக மூன்று விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-
சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க நாம் உறுதியேற்போம்: பெரியாரின் நினைவு நாளில் இ.பி.எஸ். பதிவு
24 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி தந்தை பெரியார் என்று எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
24 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மீட்டெடுக்க தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் என
-
எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். படத்திற்கு த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.
-
கடலூர்: திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலி
24 Dec 2025கடலூர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம்: தமிழ்நாட்டில் தி.மு.க.-கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
24 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் தொடர்பாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
தன்மானம் காக்க, தன்னையே தந்தவர்: பெரியாரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் பெரியார் என்று அவரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
இலங்கைக்கு இந்தியா உதவி செய்வது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
24 Dec 2025கொழும்பு, புயல் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவி செய்து வருவது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
6,100 கிலோ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் முதல்முறையாக இஸ்ரோ புதிய சாதனை
24 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, அமெரிக்காவின் ஏ.எஸ்.டி.
-
எம்.ஜி.ஆர். பாதையில் பயணித்திட உறுதியேற்போம்: டிடிவி தினகரன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
-
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன பேருந்துகளின் சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Dec 2025சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.34.30 கோடி மதிப்பிலான பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று
-
தமிழகத்தை பாசிச சக்திகளால் ஒன்றுமே செய்ய முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Dec 2025சென்னை, ஜனநாயகத்தில் வலிமை மிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கும் போது எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் 
-
இன்று அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பயணம்
24 Dec 2025கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறும் அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இன்று (
-
எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றி: விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
24 Dec 2025புதுடெல்லி, எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றியை அடுத்து விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: அரசியல் பேச்சுக்கு தடை விதித்த மலேசியா போலீஸ்
24 Dec 2025கோலாலம்பூர், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பேசுவதற்கு மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதியா? மத்திய அரசு விளக்கம்
24 Dec 2025புதுடெல்லி, டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரையும் மத்திய அரசு பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
24 Dec 2025சென்னை, முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


