எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பிப்.14 - தமிழ்நாட்டில் பொதுவிநியோக திட்டம் சிறப்பாக செயல்படுகிறது, ஆகையினால் உணவு பாதுகாப்பு மசோதாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
உணவு பாதுகாப்பு மசோதா குறித்த மாநில அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மாநாடு டெல்லியில் நேற்று (13.2.13) நடைபெற்றது. மாநாட்டிற்கு மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு சார்பில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், உணவு மற்றும் கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் என்.பி.நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் பேசியதாவது:-
தமிழ்நாடு பொது விநியோக திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உணவு பாதுகாப்பை எந்த விதிவிலக்கு இல்லாமல் உறுதிப்படுத்த முடிகிறது. எங்கள் மாநிலத்தில் பொது விநியோக திட்டம் பொதுமக்களால் பெரிதும் வரவேற்கப்படுவதால், தமிழக முதல்வர் இதை அமல்படுத்த உறுதியாக உள்ளார். தமிழ்நாட்டில் அரிசி மட்டுமின்றி கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்பு பொது விநியோக திட்டமாக பருப்பு, பாமாயில் போன்றவையும் மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. மற்றொரு தமிழகத்தின் சிறப்பு என்னவென்றால், மாநிலத்திலுள்ள நியாய விலை கடைகள் தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கு கழத்தாலும், கூட்டுறவு சங்கங்களாலும் நடத்தப்படுகின்றது. ஒரு சில நியாயவிலை கடைகள் மகளிர் சுயஉதவிக்குழுக்களால் நடத்த அனுமதிக்கப்படுகின்றது. இத்தகைய கடைகளை தனியார் துறை நடத்த அனுமதிக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் ஆண்டு உணவு மானியம் ரூ.4,900 கோடியாகும். வலுவான நிர்வாக பராமரிப்பு, கண்காணிப்பு மற்றும் குறைத்தீர்க்கும் திட்டம் ஆகியவை பொது விநியோக கூட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் பல தலைமுறைகளாக அமல்படுத்தி வரும் பொது விநியோக திட்டத்தை ஒப்பிட்டு காட்டி, தற்போது மத்திய அரசு அமல்படுத்தி வரும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவதிலுள்ள எதார்த்தமான குறைபாடுகளை தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வரின் கருத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். நம்முடைய ``சமஷ்டி அமைப்பில் மாநிலங்கள் நேரடியாக மக்களோடு நெருக்கமான உறவு வைத்துள்ளதால், பிரபலமான நலத்திட்டங்களை தேர்வு செய்திவதிலும், அமல்படுத்திலும் மாநிலங்களுக்கு உரிமைகள் இருக்க வேண்டும்'' இவ்வாறு தமிழக முதல்வர் கூறிய கருத்து நிலைக்குழுவால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. 2012 பிப்.8, 9 தேதிகளில் மாநிலங்களின் உணவு மற்றும் விவசாய அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதல்வரின் கருத்து முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவை இறுதி செய்யும் முன்பு, சில ஆலோசனைகளை முன்வைக்க விரும்புகிறேன்.
தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளதுபோல், உணவு பாதுகாப்பு மசோதா குழப்பம் மற்றும் அரைகுறை தன்மையால் குறைபாடு உள்ளதாக தோன்றுகிறது. உதாரணமாக உத்தேசிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட குழுக்கள் பற்றி வகைபாடு இதை அமல்படுத்துவதில் விளக்கமாக இல்லை. நிலைக்குழுவால் கூறப்பட்டுள்ளதுபோல், வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களின் சமூக பொருளாதார சாதிவாரியான கணக்கெடுப்பு நிறைவு பெறவில்லை. குறிப்பிட்ட செயற் திட்டம் குறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் முடிவு எடுக்கவில்லை என்று நாங்கள் அறிகிறோம். இந்த நடவடிக்கைகள் நிறைவு செய்வதற்கு முன்பு அமல்படுத்தும் காலக்கெடுவை நிர்ணயிக்கக்கூடாது. இந்த வகைப்பாட்டு பிரிவுகள் அறிவியல் ரீதியானதோ, ஒப்புகொள்ளகூடியதோ இல்லை. மத்திய அரசின் இந்த மசோதாவின் பயன்பெறும் மக்கள் தொகையின் சதவிதம் கிராமப்புறத்தில் 75 சதவீதமாகவும், நகர்புறத்தில் 50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதற்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. நகர்புறங்களின் 50 சதவிதம் என்பதை தமிழ்நாட்டை மிகவும் பாதிக்கும். ஏன்என்றால் இங்கு பெரும் பகுதி, நகர்புறமாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய திட்டக்குழு உத்தேசித்துள்ள வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பிரிவுகளும் இந்த மசோதாவின் கூறப்பட்டுள்ள வகைபாடுகளும் நகர்ப்புற ஏழைகளுக்கு உணவு பாதுகாப்பு வழங்குவதை கேலிகூத்து ஆகவிடும். நகர்புறங்களின் 50 சதவிதம் என்பதை கிராமப்புறங்களை போலவே 75 சதவிதமாக்க வேண்டும் என்று நான் ஆலோசனை கூற விரும்புகிறேன்.
இயற்கை பேரிடர்களான வறட்சி, வெள்ளம், நெருக்கடி போன்ற காலங்களில் நலிந்த பிரிவை சேர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை வறுமை கோட்டுக்கு கீழே அதிகரித்து விடுகிறது. பயனாளிகளின் அடையாளம் காண்பது, சலுகை பெற்ற வீடுகள், பொதுவாக உள்ள வீடுகள், பட்டினியால் வாடும் நபர்கள், சிறப்பு குழுக்கள், கைவிடப்பட்ட நபர்கள், வீடற்றவர்கள் ஆகியவர்கள் குறித்து எந்த விளக்கமும் இல்லை. இதனால் பல தவறுகள் ஏற்படும், இவற்றை நடைமுறை பிரச்சனைகளை கொண்டு தீர்க்க வேண்டும்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவதில் மாநில அரசுகளை ஏ பிரிவு, பி பிரிவு, சி பிரிவுகளாக பிரிக்கலாம் என்று ஏற்கனவே பொதுவிநியோக திட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்களை ஏ பிரிவில் சேர்க்கலாம் என்றும் நிலைக்குழு கூறியுள்ளது. பொது விநியோக திட்டத்தில் 50 சதவிதத்தை மத்திய அரசு ஏற்கலாம் என்பது எங்களுடைய கருத்து. சலுகை பிரிவினர் பொது குழுவினர் அனைவருக்கும் மாதம் 5 கிலோ எல்லோருக்கும் வழங்கிடலாம் என்பது நிலைக்குழுவின் கருத்து. தமிழ்நாட்டின் ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு 12 கிலோ தேவைப்படுகிறது. ஆனால் இந்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டத்தின் 5 கிலோ மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்திலுள்ள எண்ணிக்கை அடிப்படையில் ஒரு நபருக்கு மாதத்திற்கு 10 கிலோ வழங்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துகிறோம்.
இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதுபோல், உணவு பாதுகாப்பு திட்டத்தில் நேரடி பணபட்டுவாடாவை நாங்கள் எதிர்க்கிறோம். இதனால் ஏழைகளுக்கு உணவு தானியங்கள் கிடைக்காது, குழந்தைகள் பட்டினி கிடக்க நேரிடும். மேலும், உணவு கூப்பன் முறை எங்கள் மாநிலத்திற்கு ஏற்றது அல்ல. எனவே இந்த யோசனைகளை இந்த மாநிலங்களுக்கு வற்புறுத்தகூடாது. தற்போதுள்ள மாநிலங்களுக்கான உணவு தானிய ஒதுக்கீட்டை உணவு பாதுகாப்பு மசோதா பிரச்சனை ஏற்படுத்தும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் 2.96 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதால் நிலைமாறி மாதந்தோறும் 2.24 லட்சம் மெட்ரிக் டன்தான் ஒதுக்க நேரிடும். தற்போதுள்ள ஒதுக்கீட்டை பாதுகாக்காவிட்டால் தமிழ்நாட்டின் பொது விநியோக திட்டம் பாதுகாப்புக்குள்ளாகும். எனவே தற்போதுள்ள உணவு தானிய திட்டத்தை பாதுகாக்கும் வகையில் தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை திருத்தவேண்டும். நிலைக்குழுவின் சிபாரிசுப்படி மத்திய தொகுப்பில், ஒதுக்கீட்டில் குறைவு ஏற்பட்டால் அதற்கு ஏற்ப நிதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை நாங்கள் ஏற்கொள்ளவதாக இல்லை. இது மேலும் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும். ஏன்என்றால், இதை விலைக்கி பொது சந்தையில் வாங்க முடியாது. எனவே உணவு பற்றாக்குறை ஏற்பட்டால், இறக்குமதி மூலம் அதை சரிசெய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் கடமையாகும்.
ஆகையினால் உணவு பாதுகாப்பு அமைப்பு மசோதாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த வேண்டுகிறேன். தற்போது தமிழ்நாட்டிலுள்ள பொது விநியோக திட்டமுறையை மேலும் சிறப்பாக அமல்படுத்த உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு உணவு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
21 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் தங்கம் மாயம் ஆனதை தொடர்ந்து ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு 10 பேர் மது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை
21 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
-
கனமழையால் நாகை, திருவாரூரில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிர்கள்
21 Oct 2025நாகப்பட்டினம் : நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்காரணமாக அயிரக்கனக்கான குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 151 மெ.டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
21 Oct 2025சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
-
எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு
21 Oct 2025வாஷிங்டன், எச்-1 பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே டகைச்சி
21 Oct 2025டோக்கியோ : ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
அமைதி ஒப்பந்தம் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் விருப்பத்தை நிராகரித்த ஈரான் சுப்ரீம் தலைவர் காமேனி
21 Oct 2025இஸ்ரேல் : அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு ட்ரம்ப் விருப்பத்தை ஈரான் சுப்ரீம் தலைவர் காமேனி நிராகரித்தார்.
-
புதுச்சேரிக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்
21 Oct 2025புதுச்சேரி : புதுச்சேரிக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
பாக். தலைவர்கள் தீபாவளி வாழ்த்து
21 Oct 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் பாகிஸ்தானிலும் உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்
-
மகளிர் உலகக் கோப்பை: முதல் அணியாக வெளியேறியது வங்கதேசம்
21 Oct 2025மும்பை : மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
-
பீகார் தேர்தலில் பின்வாங்கிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
21 Oct 2025பாட்னா : பீகார் தேர்தலில் இருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பின்வாங்கினார்.
-
இந்திய கேப்டன் வேதனை
21 Oct 2025மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியான தோல்விகள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியுள்ளார்.
-
வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் கூடுதல் வரி: சீனாவிற்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
21 Oct 2025பீஜிங் : சீனா ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்வராவிட்டால் அந்நாட்டுப் பொருட்கள் மீது 155 சதவீதம் வரி விதிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.” என்று அமெரிக்க அதிபர் டொன
-
வங்கதேச எல்லையில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய இந்திய ராணுவத்தினர்
21 Oct 2025கொல்கத்தா : இந்திய ராணுவத்தினர் வங்கதேச எல்லையில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர்.
-
தங்கத்தால் செய்யப்பட்ட ‘சுவர்ண பிரசாதம்’ ஒரு கிலோ ரூ.1.11 லட்சத்திற்கு விற்பனை
21 Oct 2025ஜெய்ப்பூர் : தங்கத்தால் செய்யப்பட்ட ‘சுவர்ண பிரசாதம்’ ஒரு கிலோ ரூ.1.11 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
-
பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை
21 Oct 2025பிரான்ஸ், பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ரிஸ்வான் அதிரடி நீக்கம்: பாகிஸ்தான் அணிக்கு புதிய ஒருநாள் கேப்டன் நியமனம்
21 Oct 2025லாகூர் : ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஷாகீன் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
டெல்லி இனிப்பு கடையில் ‘ஜிலேபி’ செய்த ராகுல்காந்தி
21 Oct 2025புதுடெல்லி : டெல்லி இனிப்பு கடையில் ராகுல்காந்தி ஜிலேபி செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
-
ஜப்பானின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
21 Oct 2025ஜப்பான் : ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சனே தகைச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
21 Oct 2025புதுடெல்லி : உடல் ஆரோக்கியத்திற்காகவும், வெற்றிக்காகவும் வாழ்த்துகிறேன் என்று நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
-
ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பரவல் எதிரொலி: கேரளாவில் இருந்து பன்றிகள் கொண்டு வர தமிழகத்தில் தடை
21 Oct 2025கோவை, கேரள மாநிலம் திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பரவல் உள்ளது.
-
மகளிர் உலகக்கோப்பை 22வது லீக்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு
21 Oct 2025கொழும்பு : மகளிர் உலகக்கோப்பை 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு தென்ஆப்பிரிக்க அணி 312 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.