முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்தில் பலியான 3 பேர் குடும்பங்களுக்கு நிதியுதவி

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.15 - அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பலியான மூன்று பேரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்  மாவட்டம், சேமந்தாங்கல் கிராமம் அருகே 7.2.2013 அன்று  சென்னையிலிருந்து காஞ்சிபுரம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கார் மீது மோதியதில், காரில் பயணம் செய்த  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த சிட்டிபாபு மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஆமணக்கத்ததோண்டி கிராமம் அருகே, 9.2.2013 அன்று ஜெயங்கொண்டம் ​ சிதம்பரம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது  அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த  சங்கர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்  அறிந்து நான்  மிகவும் துயரமடைந்தேன். 

இந்த சாலை விபத்துகளில் அகால மரணமடைந்த சிட்டிபாபு,  ரவிச்சந்திரன் மற்றும் சங்கர் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

காஞ்சிபுரம்  மாவட்டம், சேமந்தாங்கல் கிராமம் அருகே 7.2.2013 அன்று  ஏற்பட்ட சாலை விபத்தில்  ஐந்து நபர்கள் காயமடைந்துள்ளனர்  என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும்  இவர்கள் அனைவரும்  விரைவில் ரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு  லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/-​ ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 10,000/-​ ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்