முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராமப்புற இந்தியாவில் மந்தமான வளர்ச்சி: அமிதாப்

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

போபால், பிப். 16 - கிராமப்புற இந்தியாவில் மந்தமான வளர்ச்சி நிலவுவது குறித்து பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் கவலை தெரிவித்துள்ளார். திரைப்பட படப்பிடிப்பிற்காக தனது குடும்பத்தாருடன் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகருக்கு அமிதாப் பச்சன் வந்து சேர்ந்தார். அப்போது கூறிய அவர், கிராமப்புற இந்தியாவில் மந்தமான வளர்ச்சி நிலவுவது குறித்து தனது கவலையை வெளியிட்டார். இந்தியாவின் கிராமங்களில் வாழும் மக்கள் இன்னமும் பலவகைகளில் அவதிப்படுகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், சில துறைகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்திருப்பது குறித்தும் தனது மகிழ்ச்சியையும், பாராட்டையும் வெளிப்படுத்தினார். 

விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற துறைகளில் இந்தியா வளர்ச்சியடைந்திருப்பதாக அமிதாப் பச்சன் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பல்வேறு அம்சங்கள்தான் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்றும் அமிதாப் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்