முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சைக்கு வருகை தரும் முதல்வருக்கு பரிசு தயார் ஆகிறது

செவ்வாய்க்கிழமை, 5 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

கும்பகோணம் மார்ச் 6 - தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசு இதழில் வெளியிடவேண்டும் என்பதை தமிழக முதல்வர் மாண்புமிகு.அம்மா அவர்கள் கடுமையான முயற்சிக்கு பிறகு உச்சநீதிமன்றத்தை நாடி காவேரி நடுவர்மன்ற தீர்ப்பை மத்திய அரசு இதழில் வெளியிட்டுள்ளார்.

காவேரி பாயும் விவசாய சங்கத்தின் சார்பில் வருகிற 9ம் தேதி தஞ்சையில் மிகப்பிரமாண்டமான விவசாய சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாட்டின் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மாண்புமிகு.அம்மா அவர்கள் வருகிற 9ம் தேதி தஞ்சையில் மாலையில் நடைபெறும் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். 

விவசாய சங்க மாநாட்டில் கலந்து கொள்ளும் தமிழக முதல்வருக்கு விவசாய சங்கத் தலைவர் மன்னார்குடி ரெங்கநாதன் ஒரு நினைவு பரிசு வழங்குகிறார். அந்த நினைவு பரிசு சுவாமிமலையில் உள்ள தேவசேனாதிபதி சிற்பக்கலைக்கூடத்தில் 1 ஙு அடி அதாவது 16 அங்குலத்தில் ஐம்பொன் சிலை தயார் செய்யப்பட்டு தமிழக முதல்வருக்கு நினைவு பரிசாக வழங்குவதற்கு தயாராக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்