எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச்.7 - விவசாயிகளுக்கு ரூ.52 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதையொட்டி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை எழுப்பி கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இலங்கை தமிழர்களின் பரிதாப நிலை குறித்தும் உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனையொட்டி ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தையொட்டி லோக்சபை நேற்று பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. வற்புறுத்தலுக்கு மத்திய அரசு பணிந்தது.
வறுமையில் வாடும் விவசாயிகளுக்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் வங்கிகடன் ரூ.52 ஆயிரம் கோடி அளவுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதுகுறித்து விவசாயிகளின் வங்கிக்கடன் கணக்குகளை ஆய்வு செய்த மத்திய தணிக்கைக்குழு விவசாய கடன் தள்ளபடி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த பிரச்சினையை நேற்று பாராளுமன்ற லோக்சபையில் எதிர்க்கட்சிகள் கிளப்பின.
நேற்று லோக்சபை கூடியதும் பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் எழுந்து,விவசாயிகளுக்கு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிரச்சினையை எழுப்பினர். இந்த பிரச்சினையை சபையில் உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் லோக்சபை துணைத்தலைவர் கோபிநாத் முண்டே தலைமையில் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் கோரியதோடு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களுடன் இடது கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டனர். மறுபக்கம் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு சிங்கள அரசு இழைத்து வரும் கொடுமைகளை எடுத்துரைத்தனர். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷன் கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றையும் கொண்டு வந்தனர். லோக்சபையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் குழுத்தலைவர் தம்பித்துரை எழுந்து இலங்கையில் தமிழர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மூலம் பொருளாதார தடையை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். சபையின் மையப் பகுதிக்கு அ.தி.மு.க உறுப்பினர்கள் சென்று கோஷங்களை எழுப்பினர். அப்போது சபையில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார். ஆனால் விவசாயிகளுக்கு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் நடந்துள்ள முறைகேடு குறித்து சபையில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று கோரி பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் சபையின் மத்திய பகுதிக்கு சென்று கோரியதோடு கோஷங்களையும் எழுப்பிக்கொண்டியிருந்தனர். மேலும் இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூறிக்கொண்டு இருந்தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனையடுத்து லோக்சபையை சபாநாயகர் மீரா குமார் நேற்று பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
ராஜ்யசபையிலும் இலங்கை தமிழர்கள் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் குழுத்தலைவர் மைத்ரேயன் எழுப்பி பேசினார். அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி மீனவர்கள் 16 பேர்களை சிங்கள கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக மீனவர்கள் படும் துயரத்தையும் கொடுமையையும் நிரந்தரமாக போக்க வேண்டும் என்றால் இலங்கைக்கு தாரைவார்த்துக்கொடுத்த கச்சத்தீவை இந்தியா திரும்ப மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் விவசாயிகளுக்கு வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் நடந்த முறைகேடு குறித்து இதர எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிக்கொண்டியிருந்ததால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அதனால் ராஜ்யசபையும் முதல் தடவையாக ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபை மீண்டும் கூடி
யதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோரியபடி இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என்று பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 12 hours ago |
ஆனியன்ப்ரை5 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.