எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.8 - கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை, திருப்ர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல் வழியாக பெங்களூருக்கு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசின் கெய்ல் இந்தியா நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இதற்காக விவசாய நிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருவதால் தமிழக அரசு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு வருகிறது.
சென்னை அடையாறில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் நேற்று முன்தினம் கோவை, நாமக்கல் மாவட்ட விவசாயிகளையும், நில உரிமையாளர்களையும் அழைத்து கருத்து கேட்டனர். தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் விவ சாயிகளின் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்தனர்.
நேற்று 2வது நாளாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்ர் மாவட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், நில உரிமையாளர்களும் பங்கேற்றனர். காலை 10.30 மணிக்கு தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தொழில்துறை முதன்மை செயலாளர் என்.எஸ்.பழனியப்பன், திருப்ர் கலெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் அமர்ந்து ஒவ்வொரு விவசாயிகளிடமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
முதல்அமைச்சரின் ஆணைக்கிணங்க உங்களிடம் முழுமையாக கருத்து கேட்கப்பட உள்ளது. விவசாயிகளும், நில உரிமையாளர்களும் எந்தவித தயக்கமும் இன்றி சுருக்கமாக உங்கள் கருத்துக்களை எடுத்து கூறலாம். உங்களுக்கு எவ்வளவு சென்ட் இடம் உள்ளது. அதில் கெய்ல் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க எவ்வளவு இடத்தை எடுக்கிறார்கள். இதனால் உங்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை விரிவாக கூறுங்கள் என்றார்.
அப்போது விவசாயிகள் கூறியதாவது:
வேலுச்சாமி (அவினாசி தாலுகா, அய்யன் தோட்டம்): எனக்கு 1 ஏக்கர், 1 சென்ட் இடம் உள்ளது. கடந்த பிப்ரவரி 13-ந்தேதி போலீஸ் பாதுகாப்புடன் கெய்ல் நிறுவன அதிகாரிகள் வந்தனர். உங்கள் விளை நிலம் வழியாக குழாய் பதிக்க இருக்கிறோம். 67 அடி இடத்தை கையகப்படுத்துவோம் என்றனர். குழாய் சேதம் அடைந்தால் நீங்கள்தான் பொறுப்பு என்றும் மிரட்டினர். எனக்கு விவசாயத்தை தவிர வேறு வேலை தெரியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் எப்படி வாழ்வது. மாற்றுப் பாதையில் குழாய்களை பதிக்க சொல்லுங்கள் என்று தேம்பி தேம்பி அழுதார்.
பின்னர் சகஜநிலைக்கு வந்து வேலுச்சாமி கூறும்போது, தொழில் இல்லாத போது எங்களால் வாழமுடியாது. எனவே என்னை வாழ வழியற்றவன் என்று அறிவித்து தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவேன் என்றார்.
தலைமைச் செயலாளர் : கெய்ல் நிறுவனத்தினர் உங்களுக்கு ஏதாவது அத்தாட்சி தந்தார்களா?
விவசாயிகள் பதில்: எதுவும் தரவில்லை. தேசிய நெடுஞ்சாலை அல்லது ஆற்றுப்படுகை வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க சொல்லுங்கள். விவசாய நிலத்தில் குழாய் பதித்தால் எல்லா விவசாயிகளும் என்னைப் போன்ற முடிவுக்குதான் வருவார்கள்.
விவசாயி வெங்கடசாலம் (பல்லாராயன்பாளையம்): எங்கள் விவசாய நிலத்துக்கு 150 போலீசாருடன் அதிகாரிகள் வந்தார்கள். எனக்கு தென்னை மரங்கள் உள்ளன. இந்த இடம் வழியாக குழாய் பதிக்க இருக்கிறோம் என்று கூறினார்கள். அந்த குழாய் 2 அடி விட்டம் தான் உள்ளது. இதை பதிக்க 5 அடி அகலத்திற்கு இடம் போதுமானது. ஆனால் 67 அடிக்கு இடம் கேட்கிறார்கள்.
தலைமை செயலாளர்: உங்கள் நிலத்தில் ஓரமாக குழாய் செல்கிறதா? அல்லது நடுவில் செல்ல உள்ளதா?
விவசாயி: நிலத்தின் நடுவில்தான் குழாய் பதிப்பதாக கூறுகிறார்கள். இதேபோல் ஒவ்வொரு விவசாயிகளும் தங்கள் கருத்துக்களை கூறினார்கள்.
கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க ஏராளமான விவசாயிகள் வந்ததால் கூட்ட அரங்கு நிரம்பி வழிந்தது. இன்று மதியம் கிருஷ்ணகிரி, மாவட்ட விவசாயிகளிடமும் கருத்து கேட்கப்படுகிறது. கடைசி நாளான நாளை தர்மபுரி, சேலம் மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது.
விவசாயிகள் வந்து செல்ல பஸ் வசதி, உணவு, தங்கும் இடம் ஆகியவையும் அரசு சார்பில் வழங்க விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.