முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வண்டலூர் பூங்காவை முதல்வர் பார்க்கிறார்: அமைச்சர் ஆய்வு

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.15 - முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு வருகை தந்து, சுற்றிப் பார்க்கிறார். இதனை முன்னிட்டு அமைச்சர்கள் நேற்று காலை முதலே முன்னேற்பாடு கள ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 15.3.13 அன்று வருகை தரவுள்ளார்கள். அதனை முன்னிட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து வனத்துறை அமைச்சர் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பொதுப்பணித்துறை அமைச்சர் 14.3.13  நேற்று காலை ஆய்வு செய்தனர்.

வெள்ளைப்புலி, யானை, நீர் யானை ஆகிய அடைப்பிடங்களில் வனத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட்டு துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

இந்த கள ஆய்வின் போது  முதன்மை தலைமை வனப்பாது காவலர் மற்றும் வனத்துறை தலைவர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குனர் மற்றும் பிற வனத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்