முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய போப் தேர்வு: கருணாநிதி வாழ்த்து

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.15 - புதிய போப்பாண்டவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகெங்கிலும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக அர்ஜண்டினா நாட்டை சேர்ந்த  ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. 

புதிதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் போப், முதலாவதாக தேர்வு செய்யப்படும் தென் அமெரிக்கர் என்பதும், அவர் நீண்ட நெடுங்காலமாக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பதும், தனக்கென சொந்தமாக எந்த வாகனத்தையும் பயன்படுத்தாமல் பொது போக்குவரத்து வாகனத்தையே பயன்படுத்தியும், தனக்கு தேவையான உணவை தானே சமைத்து உண்டு வருகிறார் என்பதும், அவரது தந்தையார் ஒரு ரயில்வே தொழிலாளி என்பதும் நமக்கெல்லாம் பெருமை அளிக்கிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இந்த நேரத்தில் அடையும் மகிழ்ச்சியில் நானும் பங்கேற்கிறேன். 

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்