எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம்,மார்ச்.15 - ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 9படகுகளையும், 53மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றதால் ராமேசுவரம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. மீனவர்களை இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 652 படகுகளில் மீனவர்கள் மீன்வளத்துறையுடன் மீன்பிடிக்க சென்றனர். இவ்வாறு சென்ற மீனவர்கள் இலங்கை தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அந்தபகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு 4படகுகளையும், அதில் இருந்த 19 மீனவர்களையும் சிறைபிடித்து சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மீன்பிடித்துவிட்டு திரும்பி வந்த படகுகளை எண்ணியபோது ஐந்துக்கும் மேற்பட்ட படகுகள் கரைதிரும்பாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது, ராமேசுவரம் வேர்க்கோடு பகுதியை சேர்ந்த பொன்ராஜ் என்பவர் மட்டும் படகில் தனிஆளாக கரைதிரும்பியதைக்கண்டு மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொன்ராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- நாங்கள் அனைவரும் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த பகுதிக்கு மின்னல்வேகத்தில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் அனைவரும் எங்களின் படகுகளை சுற்றிவளைத்து பிடித்து துப்பாக்கியை காட்டி மிரட்டினர். அனைவரையும் படகுகளில் வரிசையாக நிற்கும்படி கூறியதோடு படகுகளின் என்ஜினை அணைத்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையால் ஆபத்தை உணர்ந்த மீனவர்கள் வயர்லெஸ் கருவி மூலம் தகவல் தெரிவிக்க முயன்றனர். இதைக்கண்ட இலங்கை கடற்படையினர் வயர்லெஸ் கருவிகளை பறித்துக்கொண்டு மீனவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் பல மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், மீனவர்களின் செல்போன்களையும் பறித்துக்கொண்டனர். அந்த சமயம் பார்த்து நான் எனது படகின் என்ஜினை புத்திசாலித்தனமாக கயிறால் கட்டி அணைத்து மீண்டும் இயக்க முடியாதபடி செய்து என்ஜின் இயங்காததுபோல நடித்தேன். இதனால் எனது படகு இயங்காமல் போனதால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர் எனது படகில் இருந்த 5மீனவர்களை மட்டும் அவர்களின் படகில் ஏற்றிக்கொண்டு என்னை துப்பாக்கியை காட்டி எச்சரித்து உயிர்பிழைத்தால் திரும்பிபோ என்று கூறினர். இதைத்தொடர்ந்து 5படகுகளில் இருந்த 34 மீனவர்களையும் சிறைபிடித்து கொண்டு சென்று விரைந்து சென்று விட்டனர். அவர்கள் சென்றதும் நான் மீண்டும் படகின் என்ஜினை இயக்கி உயிர்பிழைத்தால் போதும் என்று கரைதிரும்பினேன். இவ்வாறு கூறினார். மீனவர் பொன்ராஜின் உடலில் இலங்கை கடற்படையினர் தாக்கியதற்கான ஊமைக்காய அடையாளங்கள் காணப்பட்டன. இதைக்கண்ட ராமேசுவரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன்படி இலங்கை கடற்படையினர் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தேவசகாயம், மோட்சஅலங்காரம், ராஜபாண்டி, விசுவாசம், மேக்சின்ராஜ் ஆகியோரின் 5படகுகளை சிறைபிடித்து சென்றது தெரியவந்துள்ளது. இந்த படகுகளில் இருந்த மரியநேசன், ஞானஅருள், மோசஸ், கிளிட்டன், இன்னாசி, கிரிங்சன், சந்தியா, சுதாகர், ஜான்பிரிட்டோ, ரீகன், ராஜ், கேம்லின், ஜேசுராஜா, ஸ்னேன், பிளமன், ஆரோக்கியதாஸ், ராபின்சன், சேசு, மேக்லின், மோனிஸ்டன், விஜயகுமார், அந்தோனி, சந்தியா, நாதன், துரை, பிரசாத், திவாகர், யாகோப், மகில்சன், அந்தோனி, நோபார்ட், காந்தி, சந்தியா, டெஸ்கோ ஆகிய 34 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கை நெடுந்தீவு காரைநகர் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று பிடித்துச்சென்ற 4படகுகளில் இருந்த 19மீனவர்கள் அனைவரும் தலைமன்னார் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீனவர்களிடம் இலங்கை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக இலங்கை தலைமன்னார் பகுதியில் உள்ள மீனவர்கள், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாகவும், இதனால், இலங்கை கடல்வளம் அழிந்துவருவதாகவும், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ்டுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இலங்கை கடற்படை தங்களின் செயல்பாட்டை காட்டுவதற்காக ராமேசுவரம் மீனவர்களை சிறைபிடித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த வெறிச்செயல் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மீனவர்களை தாக்கி சிறைபிடித்து சென்றுவரும் இலங்கை அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். முன்எப்போதும் இல்லாத அளவிற்கு 9படகுகளையும், 53மீனவர்களையும் சிறைபிடித்து சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறை பிடிக்கப்பட்ட 19மீனவர்களும் தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் இந்தமாதம் 28-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மீனவர்கள் 19பேரும் இலங்கை தலைமன்னார் அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல, மற்ற மீனவர்கள் 34பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15நாட்கள் சிறைகாவலில் வைக்க உத்தரவிடப்பட்டதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 16 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 12 hours ago |
ஆனியன்ப்ரை6 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விமான நிலையம், பள்ளிகளை தொடர்ந்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் : டெல்லியில் பரபரப்பு
14 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மைக்காலமாக பள்ளிகள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது திகார் சிறைக்கும் வெடிகுண
-
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மருத்துவத்துறை: உத்தரவை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்
14 May 2024புதுடெல்லி : நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மருத்துவத்துறை இருப்பது தொடர்பாக 1996ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.