முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்மோகனின் பகல் கனவு: பாரதீய ஜனதா கிண்டல்

சனிக்கிழமை, 6 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 7 - மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று பிதமர் மன்மோகன்சிங் கூறியிருப்பது பகல் கனவு என்று பா.ஜ.க. கிண்டலடித்துள்ளது. டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், 3 வது முறையாக பிரதமர் பதவி வகிக்க வாய்ப்புண்டு. இல்லாவிடில் அப்படியொரு வாய்ப்பு வராமலும் போகலாம் என்று தெரிவித்திருந்தார். அவரது இக்கருத்தை பா.ஜ.க விமர்சித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியதாவது, 

பகல் கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் பணவீக்கத்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை அவர்கள் ஏற்கனவே ஓரங்கட்டி விட்டனர். பல்வேறு ஊழல்களினால் மக்களுக்கு இந்த அரசு துரோகம் இழைத்துள்ளது. தங்களின் உழைப்பு சுரண்டப்பட்டுள்ளதாக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் உணர்ந்து வருகின்றனர். எனவே காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்