முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களுரில் நடைபெற்ற கராத்தே போட்டியில் 6 பேர் வெற்றி

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

பெரியகுளம் ஏப் 16  - பெரியகுளத்தில் கடந்த மாதம்  நடைபெற்ற தென் மாவட்டங்களுக்கான கராத்தே போட்டிகள் மற்றும் பயிற்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சுமார் 30 வீரர்கள் வெற்றி பெற்று தென் மாநிலங்களுக்கான போட்டிக்கு தகுதி பெற்றனர். அதில்   15 வீரர்கள்   அகில இந்திய கராத்தே கழகத்தின்  சார்பில் கர்நாடக மாநிலம் பெங்களுரில் உள்ள காண்டிராவா ஸ்டேடியத்தில் கடந்த 5 6 7 தேதிகளில் நடைபெற்ற தென் மாநிலங்களுக்கிடையேயான  கராத்தே போட்டியில் கலந்து கொண்டனர். இதில் 18 வயது வரை வயது அடிப்படையிலும் 18 வயதுக்கு மேல் உடல் எடை அடிப்படையிலும் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் சுமார் 700 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.     தேனி மாவட்டத்தை சேர்ந்த 5வயதான தயா கட்டா மற்றும் சியா போட்டிகளில் மூன்றாம் இடம் பிடித்துள்ளான். 12 வயதுக்கான போட்டிகளில் நித்தீஸ்குமார் இதயதுல்லா ஹரிவிசாகன் ஆகியோர் கட்டா சியா போட்டிகளில் 2ம் இடம் பிடித்துள்ளனர். ராஜ்புர்ைணா என்ற மாணவி கட்டாவில் 2ம்இடம் பிடித்துள்ளார். 75 கிலோ எடை பிரிவில் சண்டை போட்டியில்  மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.   இவர்கள் அனைவரும் ஆலன் திலக் கராத்தே பள்ளியின் மாஸ்டர் நாகராஜ் அவர்களிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்